தமிழ், தெலுங்கு என தனது மார்க்கெட் உச்சமாக இருந்த நேரம் பெரிய குடும்பத்து நடிகருடன் லவ்தீக வாழக்கையில் இருந்த நடிகை திடீரென அவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வுக்குள் என்ட்ரி ஆனார். என்ட்ரி ஆன அதே வேகத்தில் எக்ஸிட்டும் ஆனார் என்பது பழைய செய்தி.
ஆனால், புதிய செய்தி என்னவென்றால் இந்த விவாகரத்திற்கு முழு மூல காரணமே இவர் தான் என்று மீடியா வட்டாரங்கள் தாண்டி சினிமா வட்டாரங்களே பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நடிகை சினிமாவில் என்னதான் கவர்ச்சிக்கு எல்லை இல்லாமல் இறங்கி அடித்து வந்தாலும் அவரது கணவர் வீட்டில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. சுதந்திர பறவையாக பறந்து வந்த அம்மணிக்கு புகுந்த வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்தார்கள். பிறகு, ஏன் விவாகரத்து என ரசிகர்கள் ஷாக் ஆகி கிடந்தனர்.
விஜேவுடன் ஓவர் நெருக்கம்..
ஆனால், தற்போது அதற்க்கான காரணம் இது தான் என்று ஒரு செய்தி உலா வந்து கொண்டிருகின்றது. பிரபல வீ.ஜே ஒருவருடன். ( எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவர் தான் ) நடிகை காட்டிய ஓவர் நெருக்கம் தான் விவாகரத்திற்கு காரணமாம். ஒரு கட்டத்தில் கணவரிடம் காட்டும் நெருக்கத்தை விட அந்த வீ.ஜேவுடன் ஓவர் நெருக்கமாக இருந்துள்ளார் அம்மணி.
இதையும் படிங்க : தாறுமாறாக உடலை ஏற்றி.. ஆண்டி லுக்கில்.. ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் ஜூலி..!
உச்ச கட்டமாக போட்டோ ஷூட் எடுக்கும் போது இந்த உடை பொருத்தமாக உள்ளதா..? எனக்கு அழகாக உள்ளதா..? என்று வீ.ஜேவிடம் கேட்டுவிட்டு.. அவர் ஒகே சொன்னால் மட்டும் தான் அந்த உடையில் போட்டோ ஷூட் நடத்தவே ஓகே சொல்வாராம் அம்மணி.
இந்நிலையில், இந்த விவகாரம் இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்த வீஜே தனக்கு சொந்தமான கேரவேனுக்குள் சுதந்திரமாக உலவ அனுமதி கொடுத்துள்ளார் அம்மணி.
அவர் என்னோட தம்பி மாதிரி..
கூடவே.. சில பல புகைப்படங்கள் கணவரின் வீட்டாரின் கவனத்துக்கு செல்ல.. அதிரடியாக அரங்கேறியுள்ளது விவாகரத்து. நடிகையும் விவாகரத்து கொடுத்தால் கொடுத்துட்டு போங்க.. அவர் எனக்கு உடன் பிறவா தம்பி போல.. சந்தேகமாக கேள்வி எழுப்பும் போதே நான் இறந்துவிட்டேன்.
இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் கொடுத்து இணைந்து வாழ விருப்பமில்லை என தனது உடைமைகள் அனைத்தும் இருப்பது இருப்பது போலவே விட்டுவிட்டு எதையும் எடுக்காமல் அப்போது அணிந்திருந்த உடையுடன் அவருடைய பணத்தில் வாங்கி நீண்ட நாள் உடயோகப்படுத்தாமல் இருந்த தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அம்மணி.
இந்த விவாகரம் தான் அக்கட தேசத்து சினிமா வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருகின்றது. தன்னுடைய உடன் பிறவா அக்காவின்.. ( அதாங்க.. நடிகைக்கு உடன் பிறவா தம்பினா.. நடிகை அந்த அந்த விஜேவுக்கு உடன் பிறவா அக்கா தானே..) திருமணம் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதற்கு தான் காரணம் என தெரிந்தும் அக்காவின் கணவர் வீட்டில் இவர் எதுவுமே பேசவில்லையாம்.
இத்தனைக்கும், அக்காவின் கணவர் வீட்டாருக்கும் இந்த விஜேவும் குடும்ப நண்பர்கள் வேறாம்.. என்ன கண்றாவியோ..