சினிமாவில் நடிக்க நடிகை இலியானாவுக்கு தடை..! காரணம் இதுவா..?

பிரபல இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய கேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்பு அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவருக்கு தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் வந்தன.

இதையடுத்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்பு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும் கிடைத்ததால் இவர் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா ,ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார் இலியானா.

அந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில் மிக அற்புதமான நடன அசைவுகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்தார்.இங்கு இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க இலியானாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக இலியானா தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை

மிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த இலியானா ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ என்ற புகைப்பட கலைஞரையும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்த இருவரும் திருமணம் செய்யாமலேயே லிவிங் தொகுதிகளில் வாழ்ந்துவந்தனர் அதன் பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார் இலியானா.

இதற்குப் பிறகு இந்த காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு அதிக அதிலிருந்து வெளிவர மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் உடல் எடையும் அதிகரித்தார் பின்னர் படவாய்ப்புகள் இவருக்கு படிப்படியாக குறைய ஆரம்பிக்க தொடங்கின.இந்த நிலையில் தான் நடிகை இலியானா தமிழில் நடிக்க வைக்க ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்து இருந்தாராம்.

அதிக நாட்களாகியும் கால்ஷீட் கொடுக்காத காரணத்தினால் தயாரிப்பாளர் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார் அப்படியும் பணத்தைத் திரும்ப கொடுக்காததால் அந்த தயாரிப்பாளர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம் இதனால் தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் காரணமாக நடிகை இலியானா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.மேலும் இதுகுறித்து எந்த தகவலையும் நடிகை இலியானா தெரிவிக்கவில்லை. இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …