இந்த வயசுலயும் இப்படியா..? – திமிறி நிற்கும் முன்னழகு..! – கொப்பும் குலையுமாக கஜோல் ஹாட் போஸ்..!

பாலிவுட் நடிகை கஜோல், கடந்த 1998 ல் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். இதில் அரவிந்த் சாமி, இவரை ஆசை ஆசையாக காதலிக்க, அவருக்காக கஜோலிடம் காதல் தூது செல்லும் பிரபுதேவாவை, கஜோல் காதலிப்பார். அப்படி ஒரு வித்யாசமான காதல் கதை இது. இந்த படத்தில் இடம்பெற்ற தங்கத்தாமரை மகளே பாடல், தமிழ் சினிமா பாடல்களில் இன்றும் டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில், கஜோல் மிகப்பெரிய தொழிலதிபராக, நடித்திருந்தார். அந்த படத்திலும், இவரது நடிப்பை பாராட்டை பெற்றது.
மராத்திய மொழி பேசும் கஜோல், பிரபல பாலிவுட் நடிகை. இந்தி நட்சத்திர நடிகர் அஜய் தேவ்கன் தான் இவரது கணவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனிஷா என்ற தங்கை இருக்கிறார்.

மும்பையில் வசித்து வரும் கஜோல், பல இந்தி படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றிருக்கிறார். தில்வாலே துல்கானியா லே ஜயாங்கே, குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி ஜாம், பனா ஆகிய படங்களுக்கு நடித்த கஜோலுக்கு, சிறந்த நடிகை விருதுகள் கிடைத்திருக்கிறது.
கஜோல், தீவிரமான சிவபக்தை. மிகவும் கண்டிப்பான தாயான தனது குழந்தைகளிடம் நடந்து கொள்வார். ஆனால், கணவர் அஜய் தேவ்கன், குழந்தைகளுக்கு மிக அதிகமாக செல்லம் கொடுப்பாராம். அதனால் கஜோலை விட, அவரது கணவர் அஜய் தேவ்கனை, பிள்ளைகளுக்கு அதிகமாக பிடிக்கும்.

ஆனால், சின்ன வயதில் கஜோல் பயங்கரமாக குறும்பு செய்வாராம். அவரை, காட்ஸ் என்றுதான், அவரது அம்மா அழைத்திருக்கிறார். கஜோல் நடித்த கதாபாத்திரங்களில், குப்த் என்ற கேரக்டரை மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

ராணி முகர்ஜி நடித்த பாபுல் கேரக்டரில் நடிக்க, முதலில் நடிக்க தேர்வானது கஜோல்தான். லண்டன் நைட் பிரிட்ஜில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மினியேச்சர் உருவம் வைக்கப்பட்டுள்ளது. அதில் கஜோல் மினியேச்சர் உருவமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லோரிடமும் கலகலப்பாக, நட்பாக பேசி பழகினாலும், நூறு பேரில் ஒருவரை தான் நண்பராக ஏற்றுக்கொள்வார் கஜோல். மற்றவர்களை நிராகரித்து விடுவது அவரது பாலிசி. கஜோலுக்கு மிகவும் பிடித்த நிறம் வெண்மை. அதனால், படங்களிலும் சரி, பொது இடங்களுக்கு வந்தாலும் அவர் அணிந்திருப்பது பெரும்பாலும் வெண்மை நிற ஆடைகள்தான். இன்னொரு முக்கிய விஷயம், கஜோலுக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அவ்வப்போது மனதில் தோன்றுவதை எல்லாம், கவிதையாகி எழுதி தள்ளி விடுவது இவரது வழக்கம்.

கடந்த 1974ல் பிறந்த கஜோல், தற்போது 50வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் தனது மகளுடன் விழா ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது, மகளை விட அம்மா கஜோல் அணிந்திருந்த கவர்ச்சியான ஆடையை பார்த்து, பார்வையாளர்களே அசந்து போய் விட்டார்கள். அந்த படங்களை பார்த்தால், கவர்ச்சியில் அம்மாவுக்கும், மகளுக்கும் நடுவில் ஒரு பெரிய போட்டியே நடப்பது போல தெரிகிறது. அந்த கிளாமர் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …