நடிகை கனகா வாழும் வீட்டில் என்ன நடக்கிறது..? – உதவியாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்..!

நடிகை கனகா ( Kanaka ) கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்த நடிகை கனகா கடந்த 1999 ஆம் ஆண்டு விரலுக்கேத்த வீக்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருந்த நடிகை கனகா மறைந்த பிரபல நடிகை தேவிகா தேவதாஸின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் லட்சுமி பிரியா என்பதாகும்.

திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை கனகா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்த வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது கிட்டத்தட்ட ஒரே தியேட்டரில் இரண்டு ஆண்டுகள் ஓடிய வரலாறுகள் எல்லாம் இருக்கிறது. தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நடிகை கனகா இடையில் முத்துக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Kanaka

திருமணம் செய்து கொண்ட இரண்டு வாரங்களிலேயே இவருடைய கணவர் கனகாவை விட்டுவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் மீடியா வெளிச்சத்துக்கும் வராமல் ஒதுங்கி இருந்த நடிகை கனகா கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறுவயதிலேயே இவருடைய தந்தை இவருடைய குடும்பத்தை விட்டு சென்று விட்டார்.

அதன் பிறகு கட்டிய கணவரும் இவரை கைவிட்டு சென்று விட்டார் என்ற நிலையில் தனிமையில் வசித்து வந்த நடிகை கனகா அவருடைய வீட்டை விட்டு வெளியே வராமல் வசித்து வந்திருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தற்போதைய நிலை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் நடிகை கனகா. இந்த பேட்டி இணையத்தில் வைரலானது.

Kanaka

கிட்டத்தட்ட 50 வயதை நெருங்கி விட்ட நடிகை கனகா மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. இந்நிலையில், சமீபத்தில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது நடிகை கனகா பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது அவருடைய துணியில் தீ பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சென்ற போது வீட்டை அடைத்து விட்டு அவர்களை உள்ளே அனுமதிக்காமல் இருந்திருக்கிறார் நடிகர் கனகா. மேலும் ஞாபக மறதி நோயினாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார் நடிகை கனகா.

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது மேற்கொண்டு பரவி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ..? என்று பயந்து போன தீயணைப்புதுறையினர் கனகாவை மீறி வீட்டுக்குள்ளே சென்று இருக்கின்றனர்.

Kanaka

அப்பொழுது வீடு ஒரே குப்பைமேடாக அலங்கோலமாக இருந்திருக்கின்றது. வீடு முழுதும் பழைய துணிகள் மூட்டை மூட்டையாக கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்திருக்கின்றது.

இந்த வீட்டில் யாரேனும் குடி இருக்கிறார்களா..? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அவருடைய வீடு அலங்கோலமாக இருந்திருக்கின்றது. இதையெல்லாம் தாண்டிச் சென்று தீயை அணைத்து இருக்கின்றனர். கனகா வீட்டில் என்னதான் நடக்கிறது..? அவர் என்னதான் செய்கிறார்..? என்ற மர்மம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Kanaka

இது குறித்து கனகாவை பற்றி நன்கு அறிந்த ஒரே ஒரு நபரான அவருடைய உதவியாளரிடம் இது குறித்து கேட்ட பொழுது நடிகை கனகாவின் நெருங்கிய உறவினர்களால் தான் அவர்களுடைய மோசமான நடவடிக்கையினால் தான் நடிகை கனகா இப்படி மாறிவிட்டார்.

அவர் என்ன கேட்டாலும் செய்து கொடுக்க நான் இருக்கிறேன். அவர் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவரின் வாழ்க்கையை வாழ அவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என கூறியிருக்கிறார்.

Kanaka

இவருடைய இந்த சூசகமான பேச்சு மேலும் பல மர்மங்களை குழப்பியிருக்கிறது. கனகாவுக்கு என்னதான் ஆனது..? எதனால் இவர் வீடு இப்படி அலங்கோலமாக இருக்கிறது..? நடிகை கனகாவின் தற்போதைய நிலை என்ன.? என்று பல்வேறு விதமான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …