தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி ( Kasthuri ) . கிட்டத்தட்ட புகழ்பெற்ற ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அதுவும் கஸ்தூரி தான்.
எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. இடையில் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை.ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் கலக்கி வருகிறார்.அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்.
படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடுவில் கொஞ்சம் இடைவெளி எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.
தற்போது 44 வயதாகும் கஸ்தூரி மிகவும் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதும், கவர்ச்சி பாடல்களில் நடிப்பதும் ரசிகர்களுக்கு சற்று சங்கடத்தைதான் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தான் நடித்து வெளிவராமல் போன படத்தின் பாடல் காட்சி ஒன்றில் எடுக்கபட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து என்னுடைய செக்சியான நினைவுகள். இதுவரை நீங்கள் யாரும் பார்த்திடாத எனக்கு மிகவும் பிடித்த ஃபர்பார்மான்ஸ் என்று கூறியுள்ளார்.