அந்த ‘விஷயத்தில்’ மீனா வுக்கு என் மீது கோபம்..! நீண்ட நாட்களுக்கு பின் உண்மையைச் சொன்ன நடிகர்..!

மீனா (Actress Meena) தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தேவதை நாயகியாக வலம் வந்தவர். சிறுவயதிலலேயே அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, தாய் மாமன், பாரதி கண்ணம்மா, பொற்காலம் போன்ற பல படங்களில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் அபரிமிதமான அன்பை, வரவேற்பை பெற்றவர்.

இவரது கணவர் வித்யாசாகர், கடந்தாண்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

Rajinikanth

சமீபத்தில், நடிகை மீனாவின் நீண்டகால குடும்ப நண்பராக உள்ள கலா மாஸ்டர் ஏற்பாட்டின்படி, மீனா 40 என்ற பாராட்டு விழா நடத்தப்பட்டது. மீனா, சினிமாத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மீனாவுடன் ஜோடியாக நடித்த சரத்குமார் உள்ளிட்ட ஹீரோ நடிகர்கள், அவர் நடித்த படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள், மீனாவின் நீண்டகால தோழிகளாக உள்ள ராதிகா உள்ளிட்ட நடிகையர் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு, மீனாவை பாராட்டி, வாழ்த்தி, சினிமா படப்பிடிப்புகளில் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

Rajinikanth

இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, மேடையேறி பேசினார்.நான் 169 படங்களில் இதுவரை நடித்திருக்கிறேன். இதில், 60 படங்கள் வரை வில்லனாக, மற்ற பாத்திரங்களில் நடித்ததால், அதில் எனக்கு ஜோடி யாருமில்லை. ஆனால், 110 படங்கள் வரை, நான் ஹீரோவாக நடித்த வகையில், பல நடிகைகள், 50 பேர் வரை என்னுடன் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதில் என்னுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் ஸ்ரீதேவி, மற்ற ஒருவர் மீனா.

Actress Meena

மீனா, குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், என்னுடன் நடித்தார். அதன்பின், 10, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏவிஎம் தயாரிப்பில், டைரக்டர் ஆர்வி உதயகுமார் டைரக்ஷனில் எஜமான் படம் நடிக்க முடிவானது. அப்போது, எனக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் யார் என கேட்டேன். மீனா என்றார்கள், யார் மீனா, என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு நேரில் மீனாவை பார்த்த போது அசந்து போய்விட்டேன். காலம்தான், எவ்வளவு அற்புதமானது. எவ்வளவு மாற்றங்களை அது ஏற்படுத்தி விடுகிறது என நினைத்தேன். மீனா, துவக்கத்தில் என்னுடன் பேசுவதற்கு மிகவும் வெட்கப்பட்டார். ஆனால், கடைசியில் அவர்தான் என்னுடன் அதிகமாக பேசிக்கொண்டு இருந்தார்.

Actress Meena

ஒருமுறை, படையப்பா படத்தில் நடிப்பதை பற்றி மீனாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, மீனாவிடம் படத்தின் கதையை, நீலாம்பரி கேரக்டரை பற்றி சொன்னேன். அதைக் கேட்டவுடன், நீலாம்பரி கேரக்டரில் நான் நடிக்கிறேன், என மீனா சொன்னார். உனக்கு குழந்தை முகம், கோபத்தை வெளிப்படுத்தும் அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக வராது என்று சொன்னதை அவர் கேட்கவில்லை. பின், படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் அந்த கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கட்டும். மீனா நடித்தால் சரியாக வராது என்று சொல்லி, மீனாவை சமாதானப்படுத்தச் சொன்னேன்.

Actress Meena

அந்த விஷயத்தில் மீனாவுக்கு, இன்னும் என் மீது கோபம் இருக்கும், என்று வேடிக்கையாக ரஜினி பேசினார்.நீலாம்பரி கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட விஷயத்தை, நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியே வெளிப்படையாக கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …