சமந்தா நடிப்பில், (Samantha)வரும் தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமையான, நாளை 14ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை, ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.
பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து, ராஜா காலத்து வரலாற்று படங்களை, ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் வரலாற்று படங்களை மக்கள் வெகுவாக ரசிக்கின்றனர். அந்த வகையில், ராஜமவுலி இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் மாஸ் வெற்றி பெற்றது. இன்னும் அந்த படத்தின் மீதான ஈர்ப்பு மக்களுக்கு சிறிதும் குறையவில்லை.
இந்நிலையில், எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் படமாக்கி இருந்தார். இதில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் 2ம் பாகம் வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாளை வெள்ளிக்கிழமை அன்று சாகுந்தலம் படம் ரிலீஸ் ஆகிறது. இதுவும் ராஜா காலத்து வரலாற்று படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் காணப்படுகிறது.
நடிகை சமந்தாமேலும் இந்த படத்தில், சமந்தா ராஜா காலத்து இளவரசி வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் சாகுந்தலம் வெளிவருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சமந்தா, டப்பிங் பேசி இருக்கிறார். மேலும், படம் பற்றிய சில சுவாரசியங்களையும் அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த போது, சமந்தா உண்மையான கூந்தலை பயன்படுத்தவில்லை. மேலும், 30 கிலோ எடை கொண்ட உடைகளை, ஆபரணங்களை, நகைகளை அணிந்து சிரமப்பட்டு நடித்திருக்கிறார். மேலும் இந்த படப்பிடிப்பின் போது, முயல்கள் தன்னை கடித்ததாகவும் சமந்தா கூறி இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கி இருக்கிறார். மணிசர்மா இசையமைத்து இருக்கிறார்.; காளிதார் எழுதிய சாகுந்தலம் என்ற காவியக் கதையை மையப்படுத்திய இந்த படத்தில் நடித்ததை சமந்தா, மகிழ்ச்சியுடன் இது, எனக்கு மிகவும் நெருக்கமான படம். என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத பணம்.
காவியங்களில் ஒன்றான உணர்ச்சிமிகுந்த ஒரு படத்தை இயக்கி, என் மனதை இயக்குநர் வென்ற விட்டார். இதில் வரும் உணர்ச்சி மிகுந்த காட்சிகளை பார்த்து பார்வையாளர்களும், ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். குடும்பங்களாக வந்து, இந்த படத்தை ரசித்து பார்ப்பார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
இப்போது, சாகுந்தலம் படத்தில் நடித்த சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், அதாவது படத்தில் அவர் நடித்த காட்சிகளின் போது எடுக்கப்பட்ட இளவரசி தோற்றத்தில் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன, அம்மணி மிக அம்சமாக இருக்கிறார் என்பதால், லைக்குகள் மலை போல குவிந்து வருகிறது.