என் பாய் பிரெண்டுங்க பத்தி என் புருஷன்கிட்ட.. குடும்ப ரகசியத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அதில் முக்கியமாக வாரிசு நடிகைகள் அதிகமாகவே முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகைகள் கதாநாயகியாக இருப்பதை பார்க்க முடியும்.

அதில் சிலர் நடிக்க தெரியாவிட்டாலும் கூட தங்களது தந்தையின் வரவேற்பை பயன்படுத்தி தமிழில் பெரிதாக வரவேற்பு பெறுகின்றனர். ஆனால் அப்படியும் கூட சில நடிகைகளுக்கு வரவேற்பு கிடைக்காமல் போய்விடுகிறது.

நடிகை ஸ்ரித்திகா

அப்படியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருத்திகா ஸ்ருத்திகாவை பொருத்தவரை இவர் பலம்பெரும் காமெடி நடிகனான தேங்காய் சீனிவாசனின் பேத்தியாவார். அதனை பயன்படுத்தி சினிமாவிற்குள் வரலாம் என்று நினைத்தார்.

ஆனால் அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. அதனால் இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பதே பலருக்கும் தெரியாது என்கிற நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழில் முதன் முதலாக ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருத்திகா. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு ஆல்பம் என்கிற ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்றார்.

என் புருஷன்கிட்ட

அந்த சமயத்தில் மட்டும் சமூக வலைதளங்கள் அதிக வளர்ச்சியை பெற்றிருந்தது என்றால் இவர் அதிகமாகவே வரவேற்பை பெற்று இருந்திருப்பார். ஆனால் அப்பொழுது சமூக வலைதளம் வளர்ச்சி இல்லாததால் ஒரு ஐந்து படங்களுக்கு மேல் அவர் நடிக்கவில்லை.

ஆல்பம் திரைப்படத்திற்கு பிறகு நல தமயந்தி என்கிற படத்தில் நடித்தார். பிறகு தித்திக்குதே திரைப்படத்தில் நடித்தார். தித்திக்குதே திரைப்படத்தில் கொஞ்சம் பிரபலமான ஒரு கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் மூன்றில் கலந்து கொண்டதன் மூலமாகதான் பிறகு மீண்டும் அதிக வரவேற்பை பெற்றார் ஸ்ருத்திகா.

குடும்ப ரகசியத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரித்திகா

இந்த நிலையில் தனது கணவருடன் இல்லற வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனது கணவருக்கு தெரியாமல் எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டில் இருந்து எனது போன் பாஸ்வேர்ட் வரை எல்லாமே எனது கணவருக்கு தெரியும்.

அதேபோல நான் யாராவது ஒரு ஆண் நண்பர்களுடன் பழகுகிறேன் என்றால் அதை முதலில் எனது கணவரிடம் கூறி விடுவேன். அதே மாதிரி அவர்களுடன் வெகு நேரம் பேசினாலும் கூட அந்த கால் ரெக்கார்ட் எதையுமே அலைக்காமல் வைத்திருப்பேன். எனது கணவருக்கு தெரியாத ஒரு ஆண் நண்பர் என்று எனக்கு யாருமே கிடையாது. அவரிடம் நம்பிக்கை சம்பாதிக்க நான் இவ்வளவு விஷயங்களையும் செய்ய வேண்டி இருந்தது என்று கூறுகிறார் ஸ்ரித்திகா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …