முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! யாருடன் தெரியுமா..?

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகை சுகன்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் ஆர்த்தி தேவி என்பதாகும். திரை உலகிற்காக தனது பெயரை சுகன்யா என்று மாற்றிக் கொண்டார்.

இவர் திரையில் நடிக்க வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சிகள் நடை பெற்ற பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை சன் டிவியில் தொகுப்பாளினி உமா தொகுத்து வழங்கியதை அடுத்து பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி ஃபேமஸ் ஆனது.

நடிகை சுகன்யா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இவர் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருவதோடு இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, வால்டர் வெற்றிவேல், கேப்டன், இந்தியன், சேனாதிபதி போன்ற படங்கள் அனைத்தும் திரையுலகம் உள்ள வரை இவர் பெயரை சொல்லும்.

மேலும் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சத்தியராஜ், சரத்குமார், ரகுமானோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கமலஹாசன், விஜயகாந்த் பிரபு, கார்த்திக் போன்ற நடிகைகளோடும் இணைந்து நடித்தவர்.

90-களில் தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்த இவர் திருமணம் ஆன பிறகு விவாகரத்து செய்து விட்டு திரைப்படங்களில் நடிப்பதிலும் விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார்.

முக்கிய புள்ளியின் அரவணைப்பில்..

இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் சுகன்யா பற்றி கூறும் போது அவர் விவாகரத்து செய்ததை அடுத்து பிரபல அரசியல்வாதியுடன் ரகசிய உறவில் இருந்ததாக திடுக்கிடும் தகவலை சொல்லி இருக்கிறார்.

நடிகை சுகன்யா சினிமாவில் மிகச் சிறப்பாக நடித்து வரும் போது 2002-ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இவரது திருமண வாழ்க்கை சரியாக அமையாததை அடுத்து ஓரிரு ஆண்டுகளிலேயே இவரது வாழ்க்கை முற்றுப்பெற்று விவாகரத்தில் முடிந்தது.

மெய்யாலுமா? அதுவும் யாருடன் தெரியுமா?

இந்நிலையில் விவாகரத்து பெற்றதை அடுத்து முக்கிய அரசியல் பிரமுகரோடு உறவில் இருக்கக்கூடிய விஷயத்தைப் பற்றி உடைத்து விட்ட பயில்வான் ரங்கநாதன் பேச்சு இணையத்தில் வைரலாகி வருவதோடு உண்மையிலேயே சுகன்யா அப்படி இருந்தாரா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தை அவர்களுக்குள் பேசி வருவதோடு விரைவில் இதற்கு உரிய உண்மையை கண்டறிய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஏனென்றால் பயில்வான் ரங்கநாதன் இது போல பல வகையான கிசுகிசுக்களை குறிப்பாக நடிகைகள் பற்றிய கிசுகிசுக்களை சொல்லி வரக்கூடிய இவர் ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஊர்ஜதமாகாத போது எப்படி உறுதியாகக் கூறுகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் முழித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …