அம்மா அதிகமா குடிச்சாங்க.. குடும்பமே வீணா போச்சு.. இவங்க தான் காரணம்..! – வனிதா அதிர்ச்சி தகவல்..!

சர்ச்சைக்குரிய நடிகையாக இருக்கும் வனிதா விஜயகுமார் சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடூரமான பக்கங்களை புரட்டி இருக்கிறார். இந்த புரட்டலில் ரசிகர்கள் புரண்டு போய் கிடக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் நடிகை வனிதா விஜயகுமாரின் குடும்பம் தமிழக மக்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் நெருக்கமான குடும்பம். காரணம், இவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவருமே திரைத்துறையில் பிரபலமானவர்கள்.

நடிகர் விஜயகுமார் அவருடைய மனைவி மஞ்சுளா நடிகர் அருண் விஜய் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இயக்குனர் ஹரி என அனைவருமே திரை துறையில் பிரபலமாக இருக்கக்கூடிய நட்சத்திரங்கள்.

இவர்கள் குடும்பத்தில் வீசிய ஒரு சூறாவளி இவருடைய குடும்பம் மீதான மதிப்பை இழக்க செய்தது என்பது தான் உண்மை. ஆனாலும், யார் என்ன வேண்டுமானாலும் பேசி கொண்டு போகட்டும் என்று தங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து பயணித்து வருகிறார்கள்.

ஆனால் வனிதா விஜயகுமார் மட்டும் அவ்வப்போது சச்சையான விஷயங்களில் சிக்கிக் கொண்டு தன்னுடைய பெயரை மேலும் மேலும் டேமேஜ் செய்து கொண்டு வருகிறார் என்பதுதான் உண்மை.

பல்வேறு சர்ச்சைகள் சிக்கி இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பை எந்த பிரச்சனையும் இல்லாமல் பரபரப்பாகவே கொண்டு சென்றவர் வனிதா விஜயகுமார்.

தன்னுடைய தந்தையும் பிரபல நடிகருமான நடிகர் விஜயகுமாரை பிக் பாஸ் வீட்டில் அவன் இவன் என்று உரிமையில் பேசியதில் ஆரம்பித்தது இவருடைய கூத்து தொடர்ந்து தன்னுடைய குடும்பம் குறித்தான தரக்குறைவான கருத்துக்களை தன் வாயிலாகி சொல்லிக் கொண்டிருந்தார் அம்மணி.

ஒரு கட்டத்தில் இவருடைய குணம் ரசிகர்களின் ரசிகர்களுக்கு பிடித்து போனது. இவரை கொண்டாட ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் புதிதாக ஒருவரை காதலித்து மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அடுத்த சில மாதங்களில் அவரையும் விவாகரத்து செய்தார் அம்மணி.

சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதிகா என இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் 20050ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிறிந்தனர். அதன் பிறகு மூத்த மகன் ஸ்ரீஹரியை என்னுடன் அனுப்ப வேண்டும் என்று வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவருக்கு ஆதரவாக வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமும் நின்றது. இதன் காரணமாக வனிதாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தன.

குறிப்பாக சொத்து சம்பந்தமான விஷயங்கள் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு போனது. இதனை தொடர்ந்து நடிகை மஞ்சுளாவும் விஜயகுமாரும் சேர்ந்து அளித்த பேட்டியில் வனிதா என்னுடைய மகளே கிடையாது. அவளை எங்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டோம். கடந்த சில ஆண்டுகளாகவே இரு மகள்கள் தான் எங்களுக்கு இருக்கிறார்கள். இவள் எனக்கு மகளே கிடையாது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கும் நடிகை வனிதா என்னுடைய பிரச்சினையால்தான் அம்மா மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார் இதனால் அவர்கள் அதிகமாக குடிக்க ஆரம்பித்தார்கள்.

அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் யார் என்ன சொன்னார்களோ..? அதை அப்படியே செய்து கொண்டிருந்தார். ஆனால் என் அம்மா மருத்துவமனையில் இருக்கும் பொழுது நான்தான் கூடவே இருந்தேன்.

அப்போது வீட்டில் இருப்பவர்கள் உன்னை ஏமாற்றி விடுவார்கள். இப்போதே அட்வகேட்டை கூப்பிடு.. கேமராவை கொண்டு வந்து நான் சொல்லுவதை சொல்லுவதை வீடியோ எடு என்றார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் என் வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதனால் அம்மாவின் இறப்புக்கு பிறகு அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. எனக்கும் அப்பாவுக்கும் இப்ப கூட எந்த பிரச்சினையும் இல்லை அவர் என்னை மன்னித்துவிட்டார்.

அதேபோல, அண்ணன் அருண் விஜய் கூட என்னிடம் நன்றாகவே பேசுவார். என் ரத்த சொந்தம் என் மீது எப்போதும் பாசம் வைத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் தான் என் குடும்பத்தை குழப்பி விட்டார்கள் என்று சாடி இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். யார் வெளியே இருந்து வந்தவர்கள் என்று மண்டையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Summary in English : Actress Vanitha Vijayakumar recently shocked everyone with her revelation on social media that her mother, Manjula, is addicted to alcohol. This is a situation that many families are struggling to deal with due to the stigma and family dynamics involved.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …