தற்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் படம் மிக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரிருநாளில் அபரிமிதமான வசூலை புரிந்து உலகளவில் சாதனை புரிந்து வருகிறது என்று கூறலாம்.
வரலாற்றுக் காவியமான இந்த படத்தை காண்பதற்கு அனைவரும் மிக ஆர்வமாக தியேட்டர்களில் சென்று படம் பார்த்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து முதியவர்கள் கூட தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்ப்பதால் இந்த படம் ஒரு மாஸ் வெற்றி படம் என்று கூறலாம்.
மீண்டும் மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் காம்பினேஷனில் வந்திருக்கக்கூடிய இந்த படத்தைப் போலவே முதல் முதலில் ரோஜா படத்தில் தான் மணிரத்தினமும் ஏஆர் ரகுமானும் இணைந்து வேலை செய்தார்கள்.
அந்தப் படத்தில் உயிரே …உயிரே …பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்தப் படத்தில்தான் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க மணிரத்தினம் அவரை அணுகியிருக்கிறார்.
அந்த சமயத்தில் நடிகை ஐஸ்வர்யா தெலுங்கு படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
இதனை தற்போது அவர் கூறி கவலைப்பட்டுக் கொள்வதோடு நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் என்னுடைய லைப் ஸ்டைல் வேற லெவலுக்கு போயிருக்கும். இன்னும் திரையுலகில் நான் நிறைய படங்கள் நடித்திருக்கலாம் என புலம்பி தள்ளினார்.
இதில் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் கால்சீட் கொடுத்த நிலையில் இருந்த ஐஸ்வர்யாவின் அந்த தெலுங்கு படமும் அப்படியே டிராப் ஆகிவிட்டது. இது முன்பே தெரிந்திருந்தால் சத்தியமாக நான் ரோஜா படத்தில் நடித்திருப்பேன் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அந்தக் காலத்திலேயே தன் அம்மாவுக்கு நேர்மாறாக அதிகளவு கவர்ச்சியை காட்டி நடிக்க கூடிய இவர் விக்ரம் படத்தில் நடித்ததை நினைத்து பார்த்தால் இன்னும் கூசும் அந்த அளவுக்கு அபரிமிதமான கவர்ச்சியை வெளிக்காட்டி இருந்தார்.