ஐஸ்வர்யா லட்சுமி : மணிரத்தினத்தின் மாபெரும் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஐஸ்வர்யா லட்சுமி.
அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். அவர் 2017 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேல மூலம் நடிகையாக அறிமுகமானார் .
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தற்போது திரையரங்குகளில் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்த படத்தில் இவரது கேரக்டர் மிகவும் பக்குவமான முறையில் இவருக்கு கை கொடுத்து உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் இவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறனைப் பார்த்து திரை அரங்கமே கைதட்டல்கள் நிரம்பியது.
தனி ஒரு பெண்ணாக கப்பலை செலுத்துகின்ற விதமும் யானை மீது ஏறி மன்னரோடு அமர்ந்து பவனி வந்து சண்டை போட்ட விதமும் ஆதி ஆதித்யா சோழனுக்கு இணையாக இவரது நடிப்பு இருந்தது.
சந்திரகுமாரி என்ற பெயருக்கு ஏற்ப அவர் சமுத்திரத்தில் நிகழ்த்திய சாகசங்கள் ஈடு இணையற்றது சோழர் இதிகாசத்தில் இதுபோன்ற பெண்கள் அரசியல் செய்து இருந்தது மிகவும் பெருமையான விஷயமாக உள்ளது. மேலும் தமிழ் பெண்களின் வீரத்தை பறைசாற்றும் வண்ணமாக உள்ளது.
மேலும் வந்தியத்தேவனும் சமுத்திர குமாரியான பூங்குழலியும் இணைந்து படகில் செல்லும் போது நடக்கும் உரையாடல்களையும் அவர்கள் காதல் செய்வது போல் இருக்கக்கூடிய முகபாவங்களையும் மிகவும் ரசித்த ரசிகர்கள் தற்போது அதை பரவலாக பேசி வருகிறார்கள்.
இவரும் மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் இவர் தற்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருப்பதோடு பட வாய்ப்புகளை இவருக்கு பெற்றுத்தரும் வகையில் உள்ளது.