நீ எல்லாம் ஒரு ஹீரோயினா உனக்கெல்லாம் துணை நடிகை என்ற வேட்கை அதிகம் என்று சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை தேடியதாகவும் பலரை முன் கேவலப்படுத்திய தாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்து இருக்கிறார்.
அப்படி தன்னை கூறிய இயக்குனரின் முன்பு முன்னணி ஹீரோயினாக ஆகியே தீருவேன் என்று பிடிவாதத்தின் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உருமாறி இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாநிறம் நடுத்தர வர்க்கத்துக்கே உரிய அழகு என அச்சு அசலாக பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலத்தில் குரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தொலைக்காட்சியில் நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அதன்பிறகு அறிமுக நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அதன்பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து என படிப்படியாக தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து உள்ளா.ர்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் அதன் காரணமாக பல இயக்குனர்கள் அவரை படங்களில் நடிக்க வைக்க போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
ஆரம்பகாலத்தில் படப்பிடிப்பு தளங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கூடக் கிடைக்காது. காரணம், அந்த சமயங்களில் நான் பிரபலமாக இல்லை பெரிய ஹீரோயினாகவும் இல்லை. எனவே கேரவேன் இதெல்லாம் ஏற்பாடு செய்து தர மாட்டார்கள்.
தண்ணீர் தாகம் எடுத்தால் கூட அதனை கட்டுப்படுத்திக்கொண்டு நடிப்பில் கவனத்தைச் செலுத்துவேன். முதன்முதலாக பண்ணையாரும் பத்மினியும் என்ற திரைப்படத்தில் தான் எனக்கு கேரவேன் கொடுத்தார்கள் என்று மனமுருக பேசியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
View this post on Instagram
இந்நிலையில் சூடாக பழம்புரி சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படியே எங்களுக்கும் ஒரு படி கொடுங்க என்று சொல்லி விட்டு வருகின்றனர்.