ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவரது வீட்டில் வேலை பார்த்த பெண்ணும், கார் டிரைவரும் கூட்டு சேர்ந்து வீட்டில் இருந்த தங்க நகைகள், வைர நகைகளை திருடியுள்ளனர்.
இதில், திருடுபோன நகைகள், 60 பவுன் என, ஐஸ்வர்யா போலீசில் புகார் தர, விசாரணை நடத்திய போலீஸ் 100 பவுன் நகைகளை மீட்டு இருக்கிறது.
அதாவது, திருடு போன நகைகளின் உண்மையான நிலவரம் கூட தெரியாத அளவுக்கு வீட்டில் நகை இருக்கிறதென்றால், இவர்கள் வருமானவரி கணக்குகள் எந்த அளவில் இருக்கும் என, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து, இதுகுறித்த விசாரணை ரஜினிகாந்த், தனுஷ் வீடு வரை சென்றிருக்கிறது.
மேலும், நகைகளை திருடிய ஐஸ்வர்யா வீட்டு வேலைக்காரி, நான் ஐஸ்வர்யாவின் பினாமி என்று ஒரு குண்டை தூக்கி போட்டிருப்பதும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, இளைய மகள் சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி ரஜினிக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தினார் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் உடன் அனுசரித்து வாழ்க்கை நடத்தாமல், பிரிந்து வாழ்கிறார். அதில், குடும்பத்தில் ஒற்றுமை முக்கியம், இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழுமாறு கூறியும், ஐஸ்வர்யா கேட்கவில்லை.
மேலும், மகளின் விருப்பத்துக்காக அவர் இயக்கும் லால் சலாம் படத்திலும், சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த தங்கம், வைர நகைகளை பொறுப்பாக பாதுகாத்து வைக்காமல், வீட்டு வேலைக்காரர்களே திருடும் அளவுக்கு, அலட்சியமாக இருந்துள்ளார் ஐஸ்வர்யா.
திருடுபோன நகைகள் 60 பவுன் என, குறைத்துச் சொல்லி, அதிலும் வில்லங்கத்தை உருவாக்கி இருக்கிறார். இதனால், ரஜினிகாந்த் வீடு வரை சென்று போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் பரவி வருகிறது.
இப்படி மகள் ஐஸ்வர்யா கொடுக்கும் தலைவலியால் நொந்து போயிருக்கிறாராம் ரஜினிகாந்த்.