வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் லைக்கா நிறுவனம்… அதர்வா வேண்டும்… ஒற்றைக்காலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!!

ஏற்கனவே நடிகர் முரளியின் மகனை   வைத்து திரைப்படம் எடுத்த லைக்கா நிறுவனம் அந்த படத்தை வெளியிட முடியாமல் தவிர்த்து வரக்கூடிய இந்த வேளையில் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

 இதை எல்லாம் உணர்ந்து கொள்ளாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் எடுக்க இருக்கும் படத்தில் நடிகர் அதர்வாவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கொண்டு இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து லைக்கா நிறுவனத்திற்கும் ஐஸ்வர்யா  ரஜினிகாந்த்தும் தற்போது முட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 மேலும் நெருக்கடியை இவர் லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் அதர்வா நடித்த மிகவும் நன்றாக இருக்கும் என்றும் மேலும் தனது அப்பா இந்த படத்தில் குறைந்தது 20 நிமிடங்கள் உள்ள காட்சிகள் வந்து செல்வதால் நிச்சயம் இந்த திரைப்படம் வெற்றிபெறும் என்று இவர் லைக்கா நிறுவனத்திற்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறார்.

 இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனம் அதர்வாவை ஹிரோவாக நடிக்க வைக்க தயங்கி வருகிறது. இதற்கு காரணமாக அவர் ஒரு ராசி இல்லாத நடிகர் என்று கூறி ஓரம் கட்டி வரும் நிலையில் தனது அப்பாவை காட்டி அதிக பிரஷர் கொடுத்து வருவதால் தற்போது சூப்பர் ஸ்டாரை இந்த இரண்டு படங்களிலும் புக் செய்து இருக்கக்கூடிய லைக்கா நிறுவனம் இந்த விஷயத்தில் எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் திணறி வருகிறது.

 பொன்னியின் செல்வன் படத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்ற லைக்கா நிறுவனத்திற்கு மிக அதிக அளவு லாபம் வந்துள்ள நிலையில் அடுத்தடுத்து ரஜினியை வைத்து நடிக்க திட்டமிட்டு அதையும் சரியான பாதையில் கொண்டு வந்து விட்ட இவர்கள் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த செயலால் மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

 நிறைய பிளஸ் பாயிண்ட் உடன் இருக்கும் லைக்கா நிறுவனம் தற்போது இதில் எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் திணறி வருவதை பார்த்த அனைவரும் தனுஷின் நிலையை எண்ணிப் பார்த்து அவர் செய்தது சரிதான் என்று பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …