படுக்கையில் எழும்போது அது தோன்றினால் உடனே செய்வேன்..! – கூச்சமே இல்லாமல் கூறிய ஐஸ்வர்யா..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா தற்போது வெளியிட்டிருக்க கூடிய சில தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தனது அம்மாவை போலவே படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கு படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்த இவர் தமிழில் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜ் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொடுத்த வெற்றி இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தது.

அந்த வகையில் மில் தொழிலாளி, தையல்காரன், உள்ளே வெளியே, பஞ்சதந்திரம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பரமசிவம், ஆறு, பிரியசகி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக அபியும் நானும் திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் அம்மாவாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார். மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆர்வம் திரைப்படத்தில் சவுண்டு சரோஜா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு பக்காவாக செட்டாகி இருந்தது.

தற்போது அம்மா அண்ணி உள்ளிட்ட குணசித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் நான் சோப்பு விற்று பிழைப்பு நடத்தி வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வந்த இவர் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கையில் எப்போதும் சேஃப்டி பின் அல்லது காம்பஸ் வைத்திருக்க வேண்டும். தப்பான எண்ணத்தில் யாரேனும் அருகில் வந்தால் டக்குனு எடுத்து குத்தி விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா பெண்கள் குடிப்பது குடித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். எல்லாமே ஒரு விதமான செயற்கையான மகிழ்ச்சி. அதன்பிறகு நிஜத்திற்கு வந்தே தீர வேண்டும்.

மதுப்பழக்கம் என்பது ஒரு மாயாஜாலமான மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், அது நிஜத்தை எப்போதும் மாற்றாது. நானும் குடிப்பழக்கத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து இருக்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி அதனை நிறுத்த வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை.

காலையில் படுக்கையில் இருந்து எழும்பும் பொழுது குடிக்கவேண்டும் என்று தோன்றியது என்றால் குடிப்பேன். ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நான் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். வாழ்க்கையில் நிறைய வலி கொடுக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன. சிலவற்றை என்னால் சொல்ல முடியும்.. சிலவற்றை வெளியே சொல்ல முடியாது, அதுவே மன அழுத்தமாக மாறிவிடுகிறது.

இதற்காக மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் தியானம் செய்ய சொன்னார். ஆனால் தியானம் செய்வது என்னை இன்னும் சோர்வாக்கியது போல இருந்தேன்,

அந்த நேரத்தில் சிறு வயது நண்பர்களை இணைய பக்கங்கள் மூலமாக சந்தித்து அவர்களுடன் பேசினேன். சிறுவயது நினைவுகள் என்னை புத்துணர்ச்சியாக உணவு செய்தது.

தற்போது சவுண்டு சரோஜா என்று யூட்யூப் சேனலை நடத்தி வருகிறேன். அதில் சமையல் மற்றும் அழகு கலை சோப் தயாரிப்பு உள்ளிட்டவற்றை பதிவு செய்து வருகிறேன்.

மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனாலும் படுக்கையில் இருந்து எழும்பொழுது குடிக்க வேண்டும் என்று யோசனை வந்தால் குடிப்பேன் என்று அவர் பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Summary in English : Fans of Aishwarya, the actress and daughter of Lakhmi, have been left shocked by her recent statement that she will drink alcohol if she wants to when she wakes up in the morning. This statement has sparked a debate on whether this decision of hers is a wise one or not.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …