முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்

நடிகர் அஜித், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்கு உரியவர். இது, பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக கூட அஜித் குமார் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேச்சுகள் கூட எழுந்தது. அஜித்தின் நடிப்பு, நல்ல பண்பு, மதிக்கும் குணம் போன்றவற்றால் ஜெயலலிதா மனதில் இடம்பிடித்தவர்.

ஆனால், அதிமுக சார்பாளராக தன்னை எந்த இடத்திலும் அவர் காட்டிக்கொண்டது இல்லை.
வலிமை, துணிவு படங்களுக்கு பிறகு, தனது 62வது படத்தில் நடிப்பதற்காக அஜித் குமார் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை சுப்ரமணியன் சில தினங்களுக்கு முன் காலமானார்.

இதைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் அஜித் வீட்டுக்கு நேரடியாக சென்று, ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரை போனில் அழைத்து, தந்தை மறைவுக்கு இரங்கல் கூறி, ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அப்போது, அவரிடம் பேசிய அஜித்குமார், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு, வாழ்த்துகள் கூறியுள்ளார்.
தந்தை இறந்த சோகத்தில் இருந்த போதிலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போனில் அழைத்து பேசிய நிலையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துகள் சொன்ன அஜித் குமாரின் பெருந்தன்மையான குணத்தை அதிமுகவினர் மட்டுமின்றி, அஜித் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …