தந்தை மறைந்த நேரத்தில் இப்படியா..? – சிக்கலில் நடிகர் அஜித்..! – ரசிகர்கள் ஆறுதல்..!

உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்குமாரின் ( Ajithkumar ) தந்தை பி சுப்பிரமணியம் சென்னையில் இன்று காலமானார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியாத சூழலில் அவர் சிக்கியிருக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த ஆறு மாத காலமாக கடுமையான உடல்நல பிரச்சினைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்பிரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகர் அஜித்துக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த இவர் தற்போது காலமாகி இருக்கிறார்.

இவருக்கு மோகினி என்ற மனைவியும் அனில் குமார், அனுப் குமார் மற்றும் அஜித் குமார் என்ற மூன்று மகன்களும் இருக்கின்றனர். தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இவருடைய உடல் என்று சென்னையில் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானதில் இன்று காலை 10 மணிக்கு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவருடைய இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …