அதிர்ச்சி : பிரபல இளம் நடிகை தற்கொலை..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை அகன்ஷா மோகன்  தமிழில் 9 மற்றும் திருடர்கள் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல இந்தி படங்களில் நடித்து வந்த இவர்  மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை  கொலை செய்து கொண்டிருப்பது பலரையும்  அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 மேலும் திரையுலகைச் சார்ந்த நடிகைகள் அடிக்கடி இப்படி தொடர்ந்து தற்கொலையில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்பது புரியாமல் தவிக்கிறார்கள்.

 போன வாரம் தான் இந்த நடிகை நடித்த ஹிந்தி படமான சியா திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்த இவர் ஒரு மாடல் அழகியும் கூட.

இவர் புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகை அகன்ஷா மோகன் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த இரண்டு அறைகளும் திறக்கப்படாத நிலையில் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு திறந்து பார்த்த போது தான் இந்த தற்கொலை நிகழ்ந்தது தெரியவந்தது.

இந்த தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என்று தன் கைப்பட அவர் கடிதம் எடுத்து எழுதி வைத்திருப்பதோடு மன நிம்மதி இல்லாமல் இருந்ததும் மகிழ்ச்சியே தனது வாழ்வில் இல்லை என்பதுதான் இந்த தற்கொலைக்கு காரணமாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 நடிகை அகன்ஷா மோகன்  பல மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தது தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்கள். இதை தொடர்ந்து பாலிவுட் நடிகைகளும் மன அழுத்தத்தின் காரணமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் நடந்தேறியுள்ளது  அனைவருக்குமே தெரியும்.

இதையடுத்து நடிகை அகன்ஷா மோகன் உடலை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  எனினும் தற்போது எல்லா நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஏதேனும் ஒரு மாற்று வழியில் கையாண்டால் இது போன்ற தற்கொலைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே இதற்கான நடவடிக்கைகளை திரைத் துறை சார்ந்தவர்களும் திரைத்துறை சங்கமோ நடவடிக்கை எடுத்து விட்டால் நிச்சயமாக இந்தக் கொலைகளை தடுக்க முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …