“நேரம்” படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குனர் தான் அல்போன்ஸ் புத்திரன். இவரது முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்ததை அடுத்து பல படங்களை இயக்கியிருக்கிறார்.
மேலும் இவரது இயக்கத்தில் வெளி வந்த “பிரேமம்” திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 2015 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கு என்று நிரந்தர இடத்தை பிடித்து கொண்டது.
இதனை அடுத்து யானைக்கும் அடி சறுக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப இவர் இயக்கத்தில் வெளி வந்த “கோல்ட்” திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை இவருக்கு தரவில்லை.
இதனை அடுத்து சினிமாவில் இருந்து விலகுவதாக அண்மையில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். இதற்குக் காரணம் அவருக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே பதிவு செய்தார்.
இந்நிலையில் தற்போது இவர் இரண்டு பதிவுகளை போட்டு இணையத்தையே இயங்க விடாத அளவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அப்படி என்ன பதிவுகளை இவர் போட்டு இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம்.
இவரது பதிவில் அஜித் சாருக்கான பதிவு.. நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலமாக நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக அறிந்தேன். இது பிரேமம் படத்திற்கு பிறகு நீங்கள் நிவின் பாலியை உங்கள் வீட்டில் அழைத்து பேசியதற்கு பிறகு நடந்துள்ளது.
மேலும் அந்தப் பேச்சுக்குப் பிறகு உங்களை நான் பொது மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பார்க்கவே இல்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் அதை மறைத்து இருக்க வேண்டும்.
இவை இரண்டும் இல்லை என்றால் நீங்கள் அதற்கான விளக்கத்தை எனக்கு கடிதம் மூலம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். மேலும் அஜித்தை மக்கள் நம்புவதாகவும் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து இரண்டாவது பதிவில் உதய் அண்ணா கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயிண்ட் அலுவலகத்தில் உங்களை சந்தித்து அரசியலுக்கு வர சொன்னேன். இதனை அடுத்து கலைஞர், இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை கொலை செய்தது யார்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு அதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அத்தோடு நிற்கவில்லை அந்தக் கேள்வி கேப்டன் விஜயகாந்தை கொலை செய்தது யார்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற குண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார். ஏற்கனவே ஸ்டாலின் சார் மற்றும் கமல்சாரை இந்தியன் 2 படப்பிடிப்பில் கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.
அந்தக் கொலையாளிகள் யார்? அவர்களின் அடுத்த இலக்கு ஸ்டாலின் சார் அல்லது நீங்களாகவோ தான் இருக்கும். எனவே அவன் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். அதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இதனை அடுத்து இவர் உண்மையில் இப்படிப்பட்ட பதிவுகளை போடுகிறாரா? அல்லது இவருக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தாக்கத்தால் இதுபோல் செய்கிறாரா? என்று தெரியாமல் பலரும் திணறி வருகிறார்கள்.