விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் கார்த்திக் – செம்பா கேரக்டர்களில் கணவன், மனைவியாக நடித்து, ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர்கள் சஞ்சீவ்- ஆலியா மானசா. அவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் நிஜ வாழ்விலும், அவர்கள் கணவன் மனைவி ஆகினர்.
ஐலா என்ற பெண் குழந்தையை தொடர்ந்து, கடந்தாண்டில் பிறந்த ஆண் குழந்தைக்கு அர்ஸ் என பெயரிட்டனர்.
அர்ஸ் பிறந்து ஓராண்டு ஆகி விட்டதால், சில தினங்களுக்கு முன், மாலத்தீவு சென்று அங்குள்ள கடற்கரையில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர் ஆலியா மானசா குடும்பம். அந்த கொண்டாட்ட நிகழ்வுகளை தம்பதி இருவரும் தங்களது சமூக வலைதளை பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய் டிவியில் இருந்து, சன் டிவிக்கு மாறிய ஆலியா, இனியா என்ற சீரியலில் சூப்பரான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். அதே போல், கயல் சீரியலில் எழில் என்ற கேரக்டரில் சஞ்சீவ் நடிக்கிறார்.
இந்த கயல் சீரியலில் சில தினங்களுக்கு முன், சஞ்சீவ் – ஆலியா மானசாவின் மகன் ஐலாவும் நடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது. அப்பா, அம்மா வழியில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
மாலத்தீவில், கடற்கரையில் ஆலியா மானசா- சஞ்சீவ் குடும்பத்தினர் கொண்டாட்டம் போட்ட புகைப்படங்கள், டிரணெ்டிங் ஆகி வைரலாகி வருகின்றன.