மைனா படத்தின் மூலம் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். கேரள மாநிலத்தை சேர்ந்த இவருக்கு தமிழ் மற்றும் மளையாள திரையுலகத்தில் ரசிகர்கள் பட்டாளம் நிறையவே இருந்தது. இவர் முன்னணி நடிகர்களான விஜய் விக்ரம் ஆர்யா தனுஷ் போன்றோருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்
அமலா பாலின் துறுதுறுப்பான அழகிய கண்களை பார்க்கும்போது இளைஞர்கள் அனைவருக்கும் அவர் மேல் ஒரு பிணைப்பு ஏற்படும். அந்தளவுக்கு அவர்களின் நடிப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
இவருக்கு 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.எனினும் இவரது திருமண வாழ்க்கை மிக நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஆம் இவர் 2017 தன் காதல் கணவனிடம் இருந்து விலக விவாகரத்து பெற்று விட்டார்.
விவாகரத்துக்குப் பிறகு பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் செய்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது இயக்குனர் சுசி கணேசன், கவிஞர் லீனா மணிமேகலை மீது Me Too புகார்களை அளித்துள்ளார். அது அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக திரையுலகில் பேசப்பட்டு வந்தது.
மேலும் அமலா பால் தன் மாமனாருடன் நெருக்கமாக இருக்கும் நபருடன் டேட்டிங்கில் இருந்ததாக அவரே கூறியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அத்தோடு இவர் இப்படித்தான் என்ற முத்திரையை குத்தி விட்டது.
இதுக்கு தகுந்தது போல் அமலாபாலும் வெளிப்படையாக தான் பல பேருடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும், பல நடிகர்களுடன் ஊர்சுற்றி உல்லாசமாக இருப்பதாக மிக தைரியமாக ஓபனாக பேசியிருக்கிறார்.
இப்படி ஓபனாக அமலாபால் பேசிய வந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னோடு இருந்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கொண்டே வந்துள்ளார்.எனவே இதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று யாருக்குமே தெரியவில்லை.
அமலாபாலின் வார்த்தைக்கு ஏற்றபடி தான் இவர் எடுத்திருக்கும் போட்டோக்களைப் பார்த்தாலே உண்மை நமக்குப் தெளிவாக புரியும். படுக்கையறை போட்டோவை கூட வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது பட வாய்ப்புகள் குறைந்த பின்னால் தனது இஷ்டத்துக்கு ஏற்பது போல் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் கிறங்கடித்து வருகிறார்.
இது போன்ற செயல்களினால் யார் மீது குற்றம் இருக்கிறது என்பதை காவல்துறை தான் தக்க முறையில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். இந்த தீர்ப்பு ரசிகர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.