“லட்சுமி கடாட்சம் தேவையா?- அப்ப அம்மனை வழிபடுங்க..!

லட்சுமி கடாட்சம்: அம்மன் வழிபாடு என்பது தொன்று தொட்டு நமது மரபில் இருக்கக்கூடிய பழக்கங்களில் ஒன்று என்று கூறலாம். சிவனிடம் இருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்திமயமானது என்பதை அனைவருக்கும் நன்றாக தெரியும் இதில் யார் உயர்ந்தவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே சக்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி செம்பருத்தி, அரளி மலர்களால் அம்மனை வழி விடுவதின் மூலம் உங்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும்.

amman worship

அதிலும் குறிப்பாக பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை நினைத்து பூஜை செய்யும்போது நினைத்தது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த நாட்களை நீங்கள் மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேதத்தில் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை பார்க்கும்போது பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திரலோகப் பதவியே கிட்டும் என்று அபிராமி பட்டர் விளக்கமாக தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.

amman worship

உலகில் தோன்றிய முதல் வழிபாடு சக்தி வழிபாடு என்று கூறலாம். சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா போன்ற ஐந்து பேரையும்  உருவாக்கிய அன்னையை “ஹரீம்” என்ற பீஜத்தில் எழுந்ததாக திருமூலர் கூறியிருக்கிறார்.

மேலும் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கூறப்படுகிறது. இந்த ஆடையில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவதன் மூலம் அம்மன் மகிழ்ச்சி அடைந்து பக்தர்களுக்கு வேண்டியதை தருவார் என்று பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள்.

amman worship

எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயம் காலை மாலை அம்மனை மனதை நினைத்து அம்மனின் மந்திரங்களை உச்சரித்து வருவதின் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அடியோடு அழிந்து போய் நேர்மறையான ஆற்றல்கள் கிடைப்பதோடு செல்வ செழிப்பும் குடும்பத்தில் ஏற்படும். எனவே மறவாமல் உங்கள் வீட்டில் பராசக்தியை வழிபட்டு உங்களுக்கு ஏற்படும் இன்னல்களை விரட்டியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …