அசுரன் பட நாயகி அம்மு அபிராமி பண மோசடி செய்தாங்களா? சிக்கியது ஆதாரம்…!!

அசுரன் படத்தில் நடித்த நடிகையான அம்மு அபிராமி  பண மோசடியில் சிக்கி இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் தமிழ் திரையுறதுக்கு அறிமுகம் ஆகி இருந்தார்.

மேலும் இவர் ரட்சகன், அசுரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறார்.

இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அம்மு அபிராமி பல பிரபலங்களைப் போல யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் யூடியூப் சேனல் போலவே வேறு ஒரு மர்ம ஆசாமி ஒரு போலி கணக்கையும் துவங்கி இருக்கிறார்.

அந்த போலி ஆசாமி அம்மு அபிராமியின் ரசிகர் ஒருவரிடம் உங்களுக்கு பரிசு அனுப்பப் போகிறேன் எனக்கூறி ஐயாயிரம் ரூபாய் டெலிவரி சார்ஜ் கேட்டுள்ளார்.

அந்த ரசிகரும் அபிராமி தானே கேட்கிறார் என்ற எண்ணத்தில் பணத்தை அனுப்பி விட்டார். இதனை அடுத்து இவர் ஏமாந்துள்ள விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அம்மு அபிராமி மிக கோபத்துக்கு ஆளாகியதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் பிராடுத்தனம் பண்ணுவீர்களா என்று வீடியோவில் கோபமாக பதிவிட்டிருக்கிறார்.

அதில் எனது பெயரைச் சொல்லி மோசடி செய்ததை கேட்டு எனக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அவர் காசை திருடியவர் மீண்டும் அந்தப் பணத்தை கொடுத்து விடுங்கள்.

 

இந்த அளவுக்கு கேவலகரமான செயலை யாரும் செய்யாதீர்கள். நான் யாருக்கும் பரிசு பொருட்கள் அனுப்பவில்லை. இனியும் அனுப்பப் போவதில்லை. எனவே எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் கலி முற்றியதின் காரணத்தால் என்னவோ மோசடி என்பது பல்வேறு ரூபங்களில் வந்து மனிதர் மத்தியில் ஆட்டிப்படைக்க கூடிய ஒன்றாகி விட்டது. இதில் யாரை நம்புவதில் யாரை நம்ப வேண்டாம் என்பது அவர்களுக்கே தெரியாமல் ஒரு புரியாத புதிராக உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …