அந்தகன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவலை வெளியிட்ட நடிகை சிம்ரன்…!!

 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை சிம்ரன் கனவு கன்னியாக இளைஞர்களின் நெஞ்சில் வலம் வந்தவர். தனது சீரிய நடிப்பாலும் ஆட்ட திறமையாலும் பல முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்திலேயே நடித்து பெயர் பெற்றவர்.

மூன்று தேசிய விருதுகளை அள்ளி எடுத்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படமான அந்தா தூண் படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றார்கள்.

 தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றிருந்தா.ர் மேலும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்த நிலையில் தற்போது நடிகர் தியாகராஜனை தனது மகன் பிரசாந்தை வைத்து எந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

 மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் உடன் இணைந்து பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள்.இந்தப் படத்திற்கான இசையை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

 தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அந்த தகவலை மிகவும் ஆவலோடு சிம்ரன் வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்தின் பெயர் அந்தகன் என்பதாகும்.

இந்த நிலையில் இரண்டு போஸ்டர்களையும் அவர் பதிவு செய்து தன் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாக கூறியுள்ளார். இப்போது அந்த போஸ்டர் ஆனது பெருமளவு சிம்ரன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வரும் வேளையில் அதிக அளவு லைக் குவித்துள்ளது என்று கூறலாம்.

மேலும் நடிகர் பிரசாந்த் ரீ என்ட்ரி இந்த படத்துக்கு கொடுத்து இருப்பதால் இதில் இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்று அவரது ரசிகர்களும் தற்போது இந்த படத்தை காணும் ஆவலில் இருக்கிறார்கள்.

 ஏற்கனவே தமிழ் திரை உலகில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் ஜீன்ஸ் படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். மன வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளால் இவரால் திரை உலக வாழ்வை சரியாக ஈடுகட்ட முடியாத நிலையில் தொடர்ந்து தோல்வி படங்களை தந்து தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே இவருக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை தருமா? அல்லது மற்ற படங்களைப் போல ஊற்றிக் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …