நடிகை ஆண்ட்ரியா,(Andrea) தமிழ் சினிமா நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இவரது முழு பெயர் ஆண்ட்ரியா ஜெரெமையா.தமிழ் சினிமாவில், ஆண்ட்ரியா பாடகியாக தான் முதலில் அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாகவும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனால், இந்த படங்களில், இரண்டு நாயகிகளில் ஒருவராக தான் ஆன்ட்ரியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர், அரக்கோணம், ராணிப்பேட்டையை சேர்ந்தவர். ஆங்கிலோ– இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.
Andreaஆண்ட்ரியா பத்து வயதில் இருந்தே, யங் இஸ்டார்ச்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். கல்லூரி மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. வேட்டையாடு விளையாடு படத்தில், ஒரு பாடல் பாடி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்கள், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.
கண்ணும் கண்ணும் நோக்கியா – அந்நியன் படத்திலும், கற்க கற்க – வேட்டையாடு விளையாடு படத்திலும், மாலை நேரம்– ஆயிரத்தில் ஒருவன் படத்திலும், ஏனோ ஏனோ – ஆதவன் படத்திலும், தீராத விளையாட்டு பிள்ளை – தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும், இதுவரை – கோவா படத்திலும், பூக்கள் பூக்கும் தருணம் – மதராசப்பட்டிணம் படத்திலும், ஹூ ஈஸ் த ஹீரோ – மன்மதன் அம்பு படத்திலும், நோ மணி நோ ஹனி –வானம் படத்திலும் என பல முக்கிய பாடல்கள் இவர் பாடியதே. இதில், சில பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக இப்போதும் அடிக்கடி ரசித்து கேட்கப்படுகின்றன.
Andreaஅதுமட்டுமின்றி வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், ஆடுகளம்– படத்தில் டாப்ஸிக்கும், நண்பன் – படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது ஆண்ட்ரியாதான்.சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சிக்காக ஆண்ட்ரியா, டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி மற்றும் இசைக்குழுவினர் லண்டன் சென்றனர். லண்டனில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியா பரவ விட்டார். மாடர்ன் டிரஸ்சில் அவரது புகைப்படங்ககள், டிரண்டிங் ஆனது. இப்போது பிரா போடாமல், சேலை கட்டிய நிலையில், பளீரிடும் முதுகை திருப்பிக் காட்டியபடி கிறக்கமான பார்வையில் ஆண்ட்ரியா பார்க்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Andreaஇந்த படம், சினிமாவுக்காக எடுக்கப்பட்டதா அல்லது போட்டோஷூட்டில் பிரத்யேகமாக எடுக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால், படங்களில் ஆபாசம், வக்கிரம் இன்றி, ஒரு மிருதுவான கலைத்தன்மையும், அழகும், ஆண்ட்ரியாவின் பார்வையில் ஒரு வசீகரமும் மின்னுகிறது.
தனது குரல்வளத்தில் நல்ல பாடகியாக பல இனிமையான பாடல்களை தந்திருக்கிறார் ஆண்ட்ரியா. நல்ல நடிகையாகவும் நடித்து, அந்த கதாபாத்திரங்களில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னணி குரல் கலைஞராக டாப்ஸி, இலியானா, கமாலினி முகர்ஜி பேசி நடித்த வசனங்களில் வாழ்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா.
Andreaஇப்படி ஒரு நல்ல திறன்மிக்க ஒரு பெண் கலைஞராக தன்னை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா, இப்போது வைரலாகி வரும் இந்த புகைப்படங்களில் தன்னை ஒரு சிறந்த மாடல் ஆக, கண்களால் பேசி வசீகரிப்பது, ரசிகர்களிடையே பலத்த பாராட்டை பெற்று வருகிறது.
மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.