வித்தியாசமான மனுஷி படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில் … எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா…!!

நடிகை ஆண்ட்ரியா ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் நின்று இது வரை நிலைத்து நின்று போராடுகிறார் என்றால் அதற்கென்று தனி திறமையும் ஈடுபாடும் இருக்க வேண்டும் அந்த விதத்தில் இவர் சளைத்தவர்  அல்ல .

 இன்று பெரும்பாலும் ஹீரோயின்கள் என்றால் ஹீரோக்களை கட்டிப்பிடித்து டூயட் பாட்டு மட்டும் பாடுவதற்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற காலம் காலமாக இருந்து வரக்கூடிய எண்ணக் கட்டுப்பாட்டை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கதைக்கும் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் தரக்கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

 சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகி என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். தமிழ் திரையுலகுக்கு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

 மேலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவர் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் புகழ் அடைந்தார்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா தற்போது அனல் மேல் பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த படமானது ஓ டி டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

 மேலும் நயன்தாராவை வைத்து அறம் என்கிற படத்தை இயக்கிய கோபி நாயனார் தற்போது இயக்கு வரும் மனுஷி என்ற வித்தியாசகரமான கதை அம்சம் நிறைந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

எனவே மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டு இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக திரைப்படத்தை தயாரித்து வரும் திரைப்பட குழு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து அறம் படமும் மனுஷி படமும்  ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தற்போது புரிந்துள்ளது.

இதை அடுத்து மனுஷி திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்து வருவதால் விரைவில் திரைக்கு வரக்கூடிய இந்த படத்தை பார்த்து தனக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதோடு மட்டுமல்லாமல் ஒரு புகலின் உச்சிக்கு கூடிய செல்லக்கூடிய நிலைமை ஏற்படும் என்ற எண்ணத்தில் தற்போது ஆண்ட்ரியா இருக்கிறார்.

இவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்த படம் அமையும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியவரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …