“அஞ்சலியின் அந்த உறுப்பை கசக்கும் காட்சியில்..” அங்காடிதெரு கருங்காலி கூறிய ரகசியம்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் பாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு.

இந்த படம் வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது.

அங்காடிதெரு திரைப்படம்:

இந்த படத்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் தயாரித்து வெளியாகயது.

இப்படத்தில் மகேஷ் ஹீரோவாக நடிக்க அஞ்சலி ஹீரோயினாக ஹீரோயின் ஆக நடித்து அசத்தியிருந்தார்.

குறிப்பாக இயக்குனர் வெங்கடேசன் மற்றும் கனா காணும் காலங்கள் பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

நடிகை சினேகா கவுரவ தோற்றத்தில் நடித்து இப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கொடுத்திருந்தார்.

விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்திருந்தது.

குறிப்பாக இப்ப படத்தின் கதை வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்ததாலே வெகுஜன மக்களை கவர்ந்திருந்தது என்று சொல்லலாம்.

2010ம் ஆண்டின் மாபெரும் வெற்றி திரைப்படம்:

சென்னையில் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்த படம் 2010ம் ஆண்டின் மாபெரும் வெற்ற படமாக பேசப்பட்டது. பெருவாரியான மக்களை வெகுவாக கவர்ந்த இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலேயே எடுக்கப்பட்டது தான் ஆச்சரியம்.

அதுமட்டுமில்லாமல் மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் மோசமான காட்சி குறித்து கருங்காலி கூறிய ரகசியம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஞ்சலியின் அந்த உறுப்பை கசக்கும் காட்சி:

அதாவது, அங்காடித்தெரு படத்தில் ஒரு மோசமான காட்சி இருக்கும் அதில் நான் நடித்திருப்பேன்.

அந்த காட்சியில் நான் அஞ்சலியை அறைக்குள் தள்ளி ஸ்கிரீனை இழுத்து மூடி விடுவேன். அதோடு காட்சி முடிந்துவிடும்.

எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கடுமையான சந்தேகம் இந்த காட்சி இன்னும் முடிவு வரவே இல்லையே ஸ்கிரீனை மூடிவிட்டேன்.

அதன் பிறகு என்ன நடக்கும் என்று எனக்கு ஏகப்பட்ட யோசனைகள் ஏதாவது மிக மோசமான காட்சியாக காட்டி விடுவார்களோ என்ற பயம் வேறு இருந்தது.

நான் ஒரு இயக்குனர் என்பதால் படத்தின் இயக்குனரிடம் சென்று என்ன காட்சி என்று கேட்கவும் கூச்சமாக இருந்தது.

அதன் பிறகு அப்படி இப்படி என உதவி இயக்குனர்களை அழைத்து அந்த காட்சியின் முழு கதையைப் படித்து பார்த்தேன் எனக்கு உடல் நடுங்கி விட்டது.

அடுத்த காட்சியில் நடிகை அஞ்சலி வெளிப்படையாக நடந்த விஷயத்தை கதாநாயகன் கூறுவது போல அமைக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை நிஜமாகவே இப்படி ஒரு காட்சி படத்தில் வந்தால் நம்முடைய பெயர் என்ன ஆவது தனிப்பட்ட முறையில் நமக்கு ஏதேனும் இதனால் பாதிப்பு வருமா என்றெல்லாம் பயப்பட்டேன்.

ஆனால் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஒரு திருப்பத்தை அந்த காட்சியை ஏற்படுத்தியது என்பதால் அதனை நான் பிரிவதாக உட்படுத்தவில்லை என பேசி இருக்கிறார் அந்த படத்தில் கருங்காலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் வெங்கடேஷ்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …