ரேட்டை கூட்டி கேட்க ரூட்டை மாற்றி ஷாக் கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தால்…. மூட் அவுட் ஆன அனிருத்…!

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை தனது இசையால்  செய்து உச்சத்தை தொட்டவர் தான் இளம் இசை அமைப்பாளரான அனிருத்.

 இவர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை தந்தது.

அந்த வரிசையில் இந்த வருடம் மட்டும் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், காத்து வாக்கல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்கள் வெளியாகி பாடல்கள் அதிரடி கிட்ட தந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் திரைப்படத்தை  அடுத்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்து விட்டது.

மேலும் இந்த இரண்டு படங்களிலுமே அனிருத் இசை அமைக்க வேண்டும் என்று தயாரிப்புக் குழு முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

இதனை அடுத்து அனிருத் ஒரு படத்திற்கு தலா 5 கோடி சம்பளம் என இரண்டு படங்களுக்கும் மொத்தமாக 10 கோடி கேட்டதால் லைக்கா நிறுவனம் ஒரு படத்திற்கு ஏ ஆர் ரகுமானை கமிட் செய்ய முடிவு செய்து விட்டதாக தற்போது சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை அடுத்து ஏ ஆர் ரகுமான் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள படத்திற்கு இசையமைப்பார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகிவிட்டது.எனவே மிகவும் மூட் அவுட்டில் தற்போது அனிருத் இருப்பதாக ஹோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் இழந்துள்ளது.

இதை எடுத்து சில ரசிகர்கள் அதிக அளவு வசூலை வாரிக் குவித்த பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு துளியை  இசையமைப்பாளரான அனிருத்துக்கு கொடுத்திருக்கலாம் ஆசை யாரை விட்டது.

எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுக்க வேண்டிய எண்ணம் மட்டும் இருந்தால் மட்டுமே கலைஞர்கள் இதயத்தில் அதிகளவு சந்தோஷத்தை தர முடியும் என்பதை இந்த சம்பவம் உணர்த்திவிட்டது என்று கூறிக் கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …