இசையில் பட்டையைக்கிளப்பும் அனிருத் கொள்கை என்ன தெரியுமா?

அனிருத்  பார்ப்பதற்குத்தான் சின்ன பையன் போல இருப்பார். ஆனால்  இவரின் இசைக்கு அனைவரும் அடிமை என்று கூறுமளவுக்கு ஏழு ஸ்வரங்களில் இவரது இசை விளையாடி வருகிறது.

தனுஷ் நடித்த 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். தமிழில் உச்சக்கட்டமாக இருக்கக்கூடிய நட்சத்திரங்களான  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், தல அஜித் என பலரது படங்களுக்கு இசை அமைத்து மக்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர்.

 கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.

 தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் பாடியிருக்கிறார்.

 அந்த வரிசையில் மற்ற இசை அமைப்பாளர்கள் ஆன ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா,  சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரின் இசையமைப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். அட இதில் என்ன கொள்கை இருக்கிறது. இதை வழ வழ வென்று எழுதி  இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்.

இதில் தான் முக்கியமான விஷயமே இருக்கிறது. அது என்னவென்றால் இவர் மற்ற இசையமைப்பாளர்கள்  இசையமைக்கும் படத்தில் பாடும் போது அந்த பாடலுக்கு உரிய பணத்தை அதாவது அவருடைய சம்பளத்தை பெற்றுக் கொள்வதே இல்லையாம்.

 இதற்கு காரணம் இவர் இசை மீது கொண்டுள்ள காதல் என்று கூறுகிறார்.மேலும்  இவரின் இந்த செயல்பாடு தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரின் ஆச்சரியப்படக்கூடிய இந்த குணத்தை எண்ணி அனைவரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்தக் காலத்திலும் இப்படி பலன் கருதாமல் ஒரு பணியை செய்யக்கூடிய இவருக்கு எவ்வளவு மெச்சூரிட்டி இருக்க வேண்டும் என்று மெச்சி கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …