“அதெல்லாம் குறிப்பிட்ட மதத்தின் அடையாளம்…” என்று புலம்பிய அனிதா சம்பத்-தா இது..? – வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

செய்திவாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை பிரபலம் சினிமா நடிகை சீரியல் நடிகை என பன்முகத்திறமை கொண்ட நடிகை அனிதா சம்பத் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு சில திரைப்படங்களில் செய்திவாசிப்பாளராகவே நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கினார்.

இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை முன் வைக்கப்பட்டது. செய்தி வாசிக்கும் பொழுது பொட்டு வைத்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.. தாலி தெரியும்படி உடை உடுத்த மாட்டேன் என்கிறீர்கள்.. இதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை அனிதா சம்பத்.. தாலி குங்குமம் எல்லாம் என்னுடைய மதத்தின் அடையாளம். நான் ஒரு செய்தி வாசிப்பாளர் எல்லோருக்குமான செய்தியை தான் வாசிக்கிறேன். குறிப்பிட்ட அடையாளத்தை தாங்கிக்கொண்டு என்னால் பேச முடியாது.

அது மாற்று மதத்தவரிடமிருந்து என்னை தனித்து காட்டும் என்றெல்லாம் ஏக வசனம் பேசினார். இதனை கேட்ட ரசிகர்கள், அவரவர் மத அடையாளங்களை தாங்கிக் கொண்டிருப்பதில் என்ன தனித்துவம் தெரிந்து விட போகிறது.

இந்த உலகில் இருக்கும் எல்லோரும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்த இருக்கிறார்கள். அந்த மதத்தைச் சார்ந்த பழக்க வழக்கங்கள்.. ஆடைகள்.. உணவு முறைகள் ஆகியவை அந்த மதத்தைச் சார்ந்த இருக்கின்றது.

அப்படி இருக்கும் பொழுது குங்குமம் வைத்து கொள்வது.. தாலி தெரிவது போல தோன்றுவது.. இதெல்லாம் தன்னை தனித்துக் காட்டும் என்று அனிதா சம்பத் எப்படி நம்புகிறார் என்று அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தனர்.

தாலி, குங்குமம் எல்லாம் மத அடையாளம் என்று பேசிய அனிதா சம்பத் தற்பொழுது மதுரை மீனாட்சியம்மன் கோயில் வடிவில் செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஒரு அடி உயரம்.. அரை அடி அகலம் இருக்கக்கூடிய கோயில் வடிவிலான டாலர் பதித்த ஒரு பிரம்மாண்டமான நகை ஒன்றை அணிந்து கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு தாலி.. ஒரு குங்குமம் தன்னுடைய மதத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடியது என்று பேசியவர் நடிகை அனிதா சம்பத்.

ஆனால் தற்பொழுது ஒரு கோயிலையே தன்னுடைய கழுத்தில் தொங்க விட்டிருக்கிறார். என்னோட மத அடையாளம் இது என்று புலம்பிய அனிதா சம்பதா இது..? என்று இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

மட்டுமில்லாமல் டெம்பிள் ஜூவல்லரி கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் இங்கே ஒரு டெம்பிளே ஜுவல்லாரியாக மாற்றி வைத்திருக்கிறார்களே..? என்று கலாய் கருத்துகளையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …