ஒன்னா இருந்தோம்.. திடீர்ன்னு பிரிஞ்சுட்டோம்.. அதுக்கு அப்புறம்.. நடிகை அஞ்சலி இம்புட்டு மோசமானவரா..?

சேரிடம் அறிந்து சேர் என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது எந்த நிலையிலும் பொருந்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் திரை உலகில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை எட்டிப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை அஞ்சலி பற்றிய பதிவினை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ப்ளாக் பாண்டி..

என்னையா போற போக்க பார்த்தா அஞ்சலி முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்று யாரெல்லாம் எதிர்பார்த்தார்களோ அவர்கள் முகத்தில் கரியை பூசக்கூடிய வகையில் அவரது திரை உலக வாழ்க்கை இருண்டு போனது.

ஆரம்பத்தில் இவர் நடித்த கற்றது தமிழ் படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் படை உருவாக காரணமாக இருந்தது. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த அங்காடித்தெரு படம் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவு ரசிகர்கள் விரும்பிய படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

எதார்த்தமான நிலையை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்திய அங்காடி தெரு இந்த அளவு வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் படும் பாடு பற்றி இந்த படத்தில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் அஞ்சலி நடித்த போது இவரோடு இணைந்து பிளாக் பாண்டி நடித்திருப்பார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் அஞ்சலிக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் சினிமாவோடு நின்று விடாமல் சீரியல்களிலும் நடித்த வரும் இவர் நடிகர் ஜெய் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கிசு கிசுக்கள் எழுந்து வந்தது. இதன் காரணத்தால் அதிகளவு சினிமாவில் கவனத்தை செலுத்தாமல் இருந்து விட்டார்.

அஞ்சலி..

இதை அடுத்து பிரபல நகைச்சுவை நடிகர் இவரோடு அங்காடி தெருவில் இணைந்து நடித்த பிளாக் பாண்டி அஞ்சலி பற்றிய சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அங்காடிதெரு படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதற்கு முன்பாக நல்ல நண்பர்களாக இருந்தார்கள் என்றும் வாடி, போடி என்று ஒருமையில் கூப்பிடும் அளவுக்கு அஞ்சலியை தோழியாக பாவித்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் இருவருமே ஒரு நடனப் பள்ளியில் ஒன்றாக படித்த காரணத்தால் அங்கு நிறைய நேரங்களை இணைந்து செலவழித்து இருப்பதோடு அங்காடி தெரு படத்திற்குப் பின்னும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் திரைப்படத்தில் அஞ்சலியை சந்தித்ததாக பிளாக் பாண்டி கூறியிருக்கிறார்.

நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு அஞ்சலியை சந்தித்தபோது அஞ்சலி தன்னிடம் சரியாக பேசவில்லை. இதனை அடுத்து நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா அல்லது தவறாக பேசி விட்டேனா ஏன் என்னோடு பேசவில்லை என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் அவர் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விலகிப் போய்விட்டார். இது குறித்து பேசிய பிளாக் பாண்டி யாராக இருந்தாலும் ஒருவரோடு பேசுவது அவரவர் சுதந்திரம். அதை நாம் தடுக்கக்கூடாது என்கின்ற காரணத்தால் இதைப் பற்றி நான் மேலும் அஞ்சலி இடம் பேசவில்லை என்றார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அத்தோடு ஒன்றாக பழகி இருந்த இவர்கள் இருவரும் திடீரென தெரிவதற்கு காரணம் என்ன. அந்த அளவு அஞ்சலி மோசமானவரா என்பது போன்ற பேச்சுக்களை ரசிகர்கள் தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *