தமிழில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி நாயர் தமிழில் கடந்து 2019ஆம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்பொழுது எண்ணித்துணிக என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் காலங்களில் அவள் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
டாணாக்காரன் திரைப்படத்தில் போலீசாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.டாணாக்காரன் படத்தில் அஞ்சலி நாயர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு என்று இணையத்தில் தேடினார்கள்.
அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரையும் முகத்தையும் ஆழமாக பதிய வைத்தார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயக்கி வருகிறார்.
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சலி நாயர் தொடர்ந்து கதை வலுவாக இருக்கும் படங்களை மட்டும் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.
இதுவே தன்னுடைய சினிமா எதிர்காலத்திற்கு சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறார் அம்மணி. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.