“அழகு ஃபிகரு.. அடிச்சா சிக்சரு..” – புடவை சகிதமாக சுழற்றி அடிக்கும் அஞ்சலி..!

நடிகை அஞ்சலி 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஓரளவு தனது நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைத்ததன் காரணமாக தெலுங்கு பக்கம் சென்று சில படங்களில் நடித்திருந்தார். இடையில் இவரது உடல் எடை போட்டது காரணமாக படவாய்ப்புகள் இல்லாமல் இவர் சினி உலகத்தை விட்டு சற்று விலகி இருந்தார்.

அப்போது மேற்கொண்ட கடுமையான ஒர்க்அவுட் காரணமாக உடல் எடை வெகுவாக குறைந்து விட்டது. இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்பு தேடி வந்தது.தற்போது இவர் இயக்குனர் ராம் இயக்கி வரும் ஏழுகடல் ஏழுமலை என்ற படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதனையடுத்து தற்போது இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோவில் சேலையை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருப்பது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதற்கு காரணம் அவர் கிரிக்கெட் மட்டையை தூக்கி வைத்துக்கொண்டு அடிப்பாரா? இல்லையா? என்று தெரியாத அளவுக்கு கொடுத்திருக்கின்ற போஸ் அவர்களை கிளீன் போல்ட் செய்து விட்டதாம்.

மேலும் தற்போது இந்த வீடியோ மிக வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த வீடியோவில் இவர் பந்தை அடிக்கும் போது வாய் திறந்தபடி அடித்திருக்கிறார்.

அதை பார்த்த ரசிகர்களும் வாய் பிளந்தபடி இப்படி எல்லாம் கிரிக்கெட் விளையாட முடியுமா எங்களையும் சேர்த்துக் கொள்வீர்களா? என்று பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் அது ஒரு ஓவரா அல்லது எப்படி என்று ரசிகர்களுக்கு தெரியவில்லையாம். கிரிக்கெட் விளையாட நாங்கள் தயார் நீங்கள் வருகிறீர்களா..? என்று சில ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.

சேலை கட்டி கிரிக்கெட் விளையாடி ஒரு புயலை ஏற்படுத்தியிருக்கும் அஞ்சலிக்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது. இனி சி(பி)க்சர் மழைதான் என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …