தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு திறமையை தமிழ் சினிமாவிற்கு காட்டினார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவும் தங்குவது கிடையாது தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட பிரபலமான நடிகை என்ற வளையத்தில் இருந்த நடிகை அஞ்சலி இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வந்தார். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் ஐக்கியமாகி இருந்த போது சினிமாவை ஒதுக்கி வைத்த நடிகை அஞ்சலியை அவர் திரும்பி வந்தபோது சினிமா ஒதுக்கி வைத்து விட்டது. இளம் வயதில் இவருக்கு கிடைத்த படவாய்ப்புகள் போல இப்பொழுது கிடைக்கவில்லை.
காரணம் புதிய நடிகைகளின் படையெடுப்பு தான் என்று கூறலாம். பொதுவாக நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே படங்களில் நடித்து கல்லா கட்டி விட வேண்டும்.
ஆனால் சில நடிகைகள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே கல்யாணம் செய்துகொள்வது.. லிவ்விங் டுகெதர் சென்று விடுவது… படிக்கச் சென்று விடுவது.. உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.
இதனால் அவர்களை சினிமா ரசிகர்கள் மறந்துவிடுகின்றனர். எனவே அவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.
தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் படாதபாடுபட்டு வரும் நடிகை அஞ்சலி தற்போது கவர்ச்சி உடையில் அப்படி இப்படி நெளிந்தபடி நாற்காலியில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகரின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.