தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வேலையை பார்த்து வரும்படி அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Anjaliஏற்கனவே பிரபல இளம் நடிகர் ஜெயுடன் நடிகை அஞ்சலி காதலில் இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இரண்டு ஆண்டுகள் பக்கம் வாழ்ந்து வந்தனர் என்றும் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பது போன்றும் ஒரே சமையலறையில் தோசை சுடுவது போன்றும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்று நடிகை அஞ்சலி கூறியிருந்தார். இந்நிலையில் இவருடைய திருமண பேச்சு வார்த்தை இணையத்தில் பரபரப்பை கிளம்பி இருக்கிறது.
Anjaliநடிகை அஞ்சலியின் பெற்றோர் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஒருவரை மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய அஞ்சலி எந்த ஒரு தடையும் தெரிவிக்கவில்லை சம்பந்தம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இணையத்தில் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல்களுக்கு பின்னால் நடிகை அஞ்சலி மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார்.
Anjaliமேலும் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கக்கூடிய படங்களை தவறாக இருந்தால் புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார். எனவே விரைவில் நடிகை அஞ்சலி திருமண வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
Anjaliதற்போது ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த நடிகை அஞ்சலி தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, பெண்களை மதிக்க கூடிய ஒரு நபரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.