அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் டிசம்பர் 9-ல் வெளிவருகிறதா? விபரம் உள்ளே…!!

பானி ஜாய் நிறுவனம் தயாரித்துள்ள அஞ்சலி நடித்த வெப் தொடர் வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் சின்னத்திரை பெரிய திரை எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைக்க கூடிய நிலையில் தற்போது வெப் சீரியல்களின் ஆதிக்கம் கலைகட்ட துவங்கி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் இன்றைய தலைமுறைக்கு ஏற்றபடி இந்த சீரியல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வெப் தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ், பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடித்த பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் சித்தார்த் ராமசாமி இதனை  ஒளிப்பதிவு செய்ய அஜேஷ்  இசையமைத்திருக்கிறார்.

 இந்த வெப் சீரியலின் கதை அம்சத்தை பொருத்தவரையில் அஞ்சலி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுகிறார். இதனால் இவர் கோமா நிலைக்குச் சென்றுவிட சில மாதங்களுக்கு பிறகு தான் நினைவு திரும்புகிறது.

 இந்த நிலையில் இவருக்கு கடைசி 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் மறந்து விட தான் எங்கே தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாரா? அல்லது தன்னை யாரும் கொலை செய்ய முயற்சித்தாரா? என்பது அவருக்கு தெரியவில்லை.

 இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிப்பதே கதைக்கான கதைக்களமாக உள்ளது. இந்தத் தொடரானது வெர்டிஜ் என்ற தொடரின் அதிகாரப்பூர்வமான ரீமேக் என்பது அனைவருக்கும் தற்போது புரிந்து விட்டது.

 மேலும் இந்த தொடரானது வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதனை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

எனவே இந்த வெப் சீரியலானது பட்டையை கிளப்பும் படி இருக்கும் என்று ரசிகர்கள் கருதி பெறுவதால் நிச்சயம்  இந்தத் தொடர் வெற்றி அடையும் என்று வெப் சீரியல் குழு நம்பி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …