நடிகை அனுஷ்கா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோயினாக திரும்பி உள்ளார்.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை அனுஷ்கா திருமணத்திற்காக தயாராகி வந்தார். ஆனால் இவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் இருக்ககூடிய தோஷங்களை நிவர்த்தி செய்ய கோவில் கோவிலாக ஏறி இறங்கிய அனுஷ்காவிற்கு இன்னமும் திருமணம் கைகூடவில்லை.
தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் தற்பொழுது நவீன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாற்பது வயது பெண் என்ற கேரக்டரில் நடிக்க கூடிய இவர் முதன்முறையாக இப்படி வயதான கேரக்டரில் நடிப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார் நடிகை அனுஷ்கா. அதேநேரம் மற்றொரு படத்திலும் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அது வேறு யார் படமும் அல்ல நடிகை அனுஷ்காவை காதலிக்கிறார் என்று கூறப்பட்ட பிரபாஸ் படம் நான் இந்த படம் ஒருவேளை உருவாகும் படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடித்தார் மீண்டும் பிரபாஸ் அனுஷ்கா இடையேயான கிசுகிசு புதுப் பரிணாமத்தை எடுக்கும் என்பது உண்மை.
இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் படப்பிடிப்பு தளத்தில் மொட்டை வெயிலில் சுடும் பாறை மீது மல்லாக்க படுத்திருக்கும் அனுஷ்காவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவின் அழகை வர்ணித்து வருகின்றனர்