” மனக்கவலையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா..!” அப்படி என்றால் ஒற்றை மந்திரத்தை உச்சரியங்கள்..!

இன்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் உச்சகட்ட மனக்கவலை மற்றும் மன அழுத்தம் அதிக அளவு ஏற்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இதன் காரணத்தால் அவர்களுக்கு ரத்த அழுத்தம் அல்லாமல் பலவிதமான வியாதிகள் அவர்களை கேட்காமலேயே வந்து விடுகிறது.

 இதன் மூலம் நாம் ஆரோக்கியத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் மன நிலைகளில் ஏற்றத்தாழ்வுகளின் மூலம் கடுமையான பாதிப்பை சந்திக்கிறோம். எந்த நிலையை போக்கி உங்களது சகல மனக்கவலைகளையும் போக்க கூடிய ஒற்றை மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால் போதும் உடனடியாக இதிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

 இப்படிப்பட்ட அந்த மந்திரத்தை நீங்கள் உங்கள் பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து இதில் அமர்ந்து கொண்டு கைகளில் துளசி இலைகளை வைத்துக்கொண்டு 27 முறை உச்சரித்தாலே போதும். என்ன கவலை இருந்தாலும் அது அப்படியே இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

 ஆனால் இந்த மந்திரத்தை நீங்கள்  உங்கள் மனதார உச்சரிக்கும் போது தான் இந்த முழு பலன் கிடைக்கிறது. எத்தனை வேலை இருந்தாலும் அதையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு குறைந்தது ஐந்து நிமிடங்கள் இதற்காக நீங்கள் ஒதுக்கி விட்டால் உங்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உங்களது மன கவலை உங்களிடம் இருக்காது.

 அதுமட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமும் பன்மடங்காக உயரும்.

அப்படிப்பட்ட மந்திரத்தை நான் இப்போது உங்களுக்கு கூறுகிறேன் அந்த மந்திரம் என்னவென்றால்

“ஓம் கோரட்ச சித்தாய நம” 

 இந்த மேற்கூறிய மந்திரத்தை நீங்கள் அதிகாலையில் குளித்துவிட்டு சுவாமி அறையில் விளக்கினை ஏற்றி 27 முறை உச்சரித்தால் உங்கள் மனக் கவலை ஓடிவிடும். நீங்கள் கட்டாயம் இந்த மந்திரத்தை உச்சரித்துப் பார்த்து அதன் மூலம் பலன் பெற்றால் எங்களோடு பகிருங்கள்.

மேலும் இந்த மந்திரத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் கற்றுக் கொடுத்து அனைவரும் கூட்டாக வழிபாடு செய்வதின் மூலம்  நேர்மறையான ஆற்றல் உங்கள் வீட்டில் வந்து சேரும். இதன் மூலம் நீங்கள் சகல சௌபாக்கியம் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …