பைரவா… பட துணை நடிகையாக நடித்த அபர்ணா வினோத்தின் நிச்சயதார்த்தம்..!

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் சுரேஷ் கீர்த்திக்கு தோழியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகை தான் அபர்ணா வினோத்.

 இந்த படத்தில் மிக நேர்த்தியான முறையில் கீர்த்தி சுரேஷோடு இணைந்து நடித்த நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வரும் என இவர் காத்திருந்தார்.

 எனினும் சொல்லுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த ஒரு தமிழ் பட வாய்ப்பு வராத வேளையில் இவர் மீண்டும் மலையாளத்தின் பக்கமே சென்று விட்டார்.

 மலையாளத் திரைப்படத்தில் இவர் நான் நின்னோடு கூடே உண்டு என்ற படத்தில் தான் முதல் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார்.

 இதனைத் தொடர்ந்து கோகினூர் என்ற திரைப்படத்தில் நடித்த போது இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அதிகளவு இவரை பாராட்டினார்.

 இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் அதிக அளவு ரசிகர் பட்டாளம் இவருக்கு உருவானது. பைரவா படத்திற்கு பின்னர் இவர் நடுவன் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்த போதும் அந்த படம் சரியான அளவு மக்களிடையே ரீச் ஆகாத காரணத்தினால் இவருக்கு தமிழ் திரை உலகில் பெரிய அளவு எந்த பெயரும் கிடைக்கவில்லை.

தற்போது இந்த நடிகை கோழிக்கோட்டை சேர்ந்த ரனில்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இரு இல்லத்தின் சார்பாகவும் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

 இதனை உறுதி செய்யும் விதத்தில் அபர்ணா வினோத் கூறும் போது உன்னை என்று முதல் முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எனக்குள் எல்லாமே மாறத் துவங்கியது… என்று குறிப்பிட்டதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் தான் என்பது உறுதியாகிவிட்டது.

 தற்போது இந்த காதல் திருமணம் தான் பெற்றோர்கள் சம்மதத்தோடு நிச்சயதார்த்தமாக தற்போது மாறி உள்ளது. இதனை அடுத்து பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …