வெள்ளைப்படுதல் நிற்க..! – குணமாக என்ன செய்ய வேண்டும்..? – வாங்க பாக்கலாம்..!

 இன்று இளம் பெண்கள் முதல் பிள்ளை பெற்ற பெண்கள் வரை வெள்ளைப்படுதல் என்ற பிரச்சனையின் மூலம் அதிக அளவு பாதிப்படைந்து இருக்கிறார்கள்.

இந்த பாதிப்பில் இருந்து வெளிவருவதற்காக எண்ணற்ற மருந்துகளை அவர்கள் அருந்தியும் பலன் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் நான் கூறும் இந்த மருந்தினை இல்லை இல்லை உணவில் எந்த பொருளை மட்டும் சேர்த்தால் போதும் உங்களது வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நீங்கள் பை பை சொல்லி விடலாம்.

 வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வாகும் அரிநெல்லி

 நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதியமானுக்கு நெல்லிக்கனியை ஔவை கொடுத்தது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை நல்க கூடிய மலை நெல்லியை போலவே அரி நெல்லிக்காயும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டது.

இது பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு மிகச்சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த நெல்லிக்காய் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டதினால் சூட்டினால் ஏற்படுகின்ற வெள்ளைப்படுதல் முற்றிலும் நீங்கும்.

 உங்கள் உணவில் நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்தோ அல்லது அப்படியே உண்ணுவதன் மூலம் உங்களுக்கு வெள்ளைப்படுதல் நோய் எட்டியே பார்க்காது.

 மேலும் பெண்கள் விரும்பும் அடர்ந்த கூந்தலை பெறுவதற்கான முடி வளர்ச்சிக்கு இது உறுதுணையாக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்து நீங்கள் விரும்பும் முடி வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதினால் இதை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் தலை முடி நன்கு வளரும்.

 செரிமான பிரச்சனைகள் இருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதோடு மலச்சிக்கலையும் தீர்க்கும் தன்மை இந்த அரி நெல்லிக்கனிக்கு உள்ளதால் இது குடலை சுத்திகரிப்பதில் மிகச் சிறந்த பணியை செய்கிறது.

 உடலில் பித்தம் அதிகரித்தால் வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். எனவே நீங்கள் பித்தத்தை தணிப்பதற்காக உணவில் நெல்லிக்காயை சாப்பிடுவதின் மூலம் பித்தத்தை குறைத்து இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைங்கலாம்.

 நீங்கள் வெளிநாட்டு பழமான கிவி பழத்தை வாங்கி சாப்பிடுவதைவிட நமது பாரம்பரிய நெல்லிக்காயை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க முடியும்.

 வைட்டமின் சி சக்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி காய்ச்சல் அண்ட விடாமல் பாதுகாப்பு வளையம் போல செயல்படும்.

 பெண்களுக்கு ஏற்படுகின்ற ரத்த சோகைக்கு புள்ளி வைக்க அரி நெல்லியில் இருக்கக்கூடிய இரும்பு சத்து, கால்சிய சத்து, பாஸ்பரச்சத்து போன்றவை உதவி செய்கிறது.

எனவே சிறு பெண்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நெல்லிக்காயை சாப்பிடுவது சாலச் சிறந்தது. 30 வயதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு பலவீனத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அளவு கால்சிய சத்து இதில் வலுவாக உள்ளது. எனவே உங்களது எலும்புகளை வலுப்படுத்த இதை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

வயிற்றுப்போக்கு சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் இந்த நெல்லிக்காயை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்த சுத்திகரிப்பு ஆவதுடன் பசியும் தூண்டப்படும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …