இந்திய கிரிக்கெட் என்றால் அதில் ஜாம்பவானாக இருந்த சச்சின் டெண்டுல்கரை பட்டிதொட்டி முதல் அனைவருக்கும் நன்றாக தெரியும் இவரின் ஆட்டம் திறன் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் கண்டு கடைபிடிக்கிறோம் அப்படிப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவானின் வாரிசான இவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இந்த ஐபிஎல்லில் எதனால் சோபிக்கவில்லை ஆடுவதற்கு ஏன் அவரை அனுமதிக்கவில்லை என்பதற்கான காரணங்களை மிகத்தெளிவாக சச்சின் வெளியிட்டிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் போன ஐபிஎல் தொடரிலிருந்தே சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இருந்த போதும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கு காரணமாக மும்பை இந்தியன்ஸ் செட்-அப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சச்சின் டெண்டுல்கரை தான் கூற வேண்டும்.
பையனை நடக்கும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யும் போது எங்காவது சோதப்பிவிட்டால் நெட்டிசன்கள் கேலி செய்யும் போது மன உறுதியை குலையும் என நினைத்திருக்கலாம்.
மேலும் ரூ30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலம் எடுத்ததும் வாய்ப்பளிக்கவில்லை என்று கேள்விக்கு, சச்சின் இதனை வித்தியாசமான கேள்வியாய் உணருவதாக கூறியுள்ளார்.
சீசன் முடிந்து விட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணித்தேர்வு குழுவின் முடிவில் பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார்.
அணித்தேர்வு பற்றி சச்சின் கூறிய போது, “நான் அணித்தேர்வில் தலையிடுவது கிடையாது. அணி நிர்வாகத்திடம் விட்டு விடுவேன். நான் எப்பவும் இப்படித்தான் இயங்குவது, என் விருப்பத்தை யார் மீதும் திணிப்பது கிடையாது, ஒரு புரோசஸில் வரவேண்டும் என நினைப்பவன் என்றார்.