என்ன இது? அடுத்தடுத்து இரண்டாம் திருமணம் திரையுலகில் அதிகமாக நடக்கிறதே… அந்த வரிசையில் அருண் ராஜா காமராஜ்…!

 தற்போது திரை உலகில் அதிகமாக விவாகரத்துக்கள் பெருத்து இரண்டாம் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவில்  பல  இரண்டாம் திருமணங்கள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் இயக்குனரான அருண் ராஜா காமராஜ் இணைந்து இருக்கிறார்.

திரைத்துறையில் இருப்பவர்கள் அனைவருமே கட்டாயமாக ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை கடைப்பிடித்து வருகிறார்கள் என்று  கூற முடியாது.

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பவர்கள் சில திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.எனினும் திரை உலகம் என்றாலே கூத்தாடும் கூட்டம் என்றுதான் ஒரு சிலர் அதற்கு முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள்.

அதற்கு ஏற்பதான் எத்தனை வயசு ஆனாலும் காம இச்சை தீராது என்று கூறுவதற்கு ஏற்ப தற்போது கண்ணான கண்ணே சீரியலில் நடித்த 50 வயதை கடந்த நடிகர் ஒருவர் 24 வயதான ஒரு பெண்ணை மணந்திருக்கிறார்.

இதனை அடுத்து பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்திறமையை தன்னகத்தைக் கொண்டிருக்கக் கூடிய அருள் ராஜா காமராஜ் இவர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் தயாரித்து நடித்த கானா பாடத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இவரின் சீரிய திறனை பார்த்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற மற்றொரு படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படமானது ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 இன் கீழ் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் அருண் ராஜாவின் மனைவி சிந்து மரணம் அடைந்து விட்டார். இவரின் மரணத்தை தொடர்ந்து அவர் அதில் மீண்டு வருவதற்காக சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

 இதனை அடுத்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் விரைவாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

இவரது திருமணம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றதாகவும் இந்த திருமணத்தைப் பற்றி அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் தற்போது ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …