ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கழட்டி விட்டால் என்ன? களவாணி இயக்குனர் சற்குணம் படத்தில் இணைந்த அதர்வா… மிரட்டும் போஸ்டர்….!!

 நடிகர் முரளியின் மகனாகிய அதர்வா தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனது அப்பா போடவே செல்வாக்கை பெற்றவர். எனினும் இவருக்கு ராசி இல்லை என்ற பட்டத்தைக் கட்டி லைக்கா நிறுவனம் இவரை இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டது.

 மேலும் பிடிவாதமாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எண்ணத்தை மாற்றிவிட்டு தற்போது அந்த படத்திற்கு விஷ்ணு விஷாலை நடிக்க ஒப்பந்தம் போட்டு விட்டார்கள்.

 எப்போதுமே ஒரு கதவு மூடப்பட்டால் மற்றொரு கதவு திறக்கும் என்ற எண்ணத்திற்கு ஏற்ப தற்போது அதர்வாவுக்கு ஒரு வாய்ப்பு மிகச் சிறப்பான முறையில் கிடைத்திருக்கிறது.

 நடிகர் அதர்வா 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர். அடிப்படையில் இவருக்கு சினிமா பேக்ரவுண்டில் அவர் அப்பா இருந்ததால் அறிமுகத்தில் இவருக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் கவனத்தைப் பெற்றார். அது மட்டுமல்லாது சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான குருதி ஆட்டம், ட்ரிக்கர் போன்ற பல படங்கள் கலவையான விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது.

 இதனை அடுத்து தற்போது இவர் களவாணி, வாகை சூடவா போன்ற படங்களை இயக்கிய ஏ சற்குணம் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தை சற்குணம் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இதை அடுத்து இந்தப் படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

 அதன்படி எந்த படத்திற்கு பட்டத்து அரசன் என்ற பெயரை படக்குழு வைத்துள்ளது.இது தொடர்பான பாஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் வேண்டாம் என்று கூறிய லைக்கா நிறுவனம் இவருக்கு எப்படி மறுபடியும் வாய்ப்பு தந்திருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பி விட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …