நம்ம கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவி தன்னுடைய தனிப்பட்ட திறமையால் தற்போது சினிமாவின் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார். குறும்படம் டப்ஸ்மாஷ் ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக சினிமா பின்னணி கொண்ட நடிகர் நடிகைகள் தான் சினிமாவில் நுழைந்து ஜெயிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்து எரிந்து உள்ளார் நடிகை அதுல்யா ரவி.
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னணி நடிகையாகும் வாய்ப்பை பெற்றுள்ளார் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கிறார் அதுல்யா ரவி.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்திக்கொள்ள ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்துக் கொள்ள என பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிடுவதை தவறவிடாமல் செய்து வருகின்றார்.
அந்த வகையில் நடுக் கடலில் மிதக்கும் கப்பலில் சட்டையை மடித்து கட்டிக்கொண்டு அழகு கொஞ்சும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச சேலத்து மாம்பழம் மாதிரி வழவழன்னு இருக்கீங்க என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்