வீட்டில் அமைதி நீங்கும் இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனே கடாசி விடுங்கள்..! இல்லையென்றால் ஆபத்து தான்..!!

உங்கள் வீட்டில் நான் சொல்லக்கூடிய பொருட்கள் இருந்தால் அந்த பொருட்களை உடனே வேண்டாம் என்று தூர போட்டு விடுங்கள். இல்லை என்றால் அந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை மீறி நீங்கள் வைத்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் அமைதி நீங்குவதோடு துரதிஷ்டங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.

வீட்டில் நீக்க வேண்டிய பொருட்கள்

💐நீங்கள் உங்கள் சோகேசில் தாஜ்மகாலை வைத்திருந்தால் உடனடியாக அந்த தாஜ்மஹால் பொம்மை, படம் போன்றவற்றை உடனே நீக்குவது கட்டாயம் ஏனென்றால் இந்த தாஜ்மஹால் ஆனது உண்மையில் ஒரு கல்லறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

💐அந்த கல்லறை அழகாக இருந்தாலும் அதை உங்களை அதை கொண்டு உங்கள் வீட்டை நீங்கள் அலங்கரிப்பதை தவிர்த்து விடு வேண்டும். இல்லை என்றால் வீட்டில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.

💐மகாபாரதம் மற்றும் ராமாயண போர் காட்சி கொண்ட போட்டோக்களை உங்கள் வீட்டில் வைத்தால் கட்டாயம் வீட்டுக்குள் சண்டை சச்சரவு அதிகரிக்கும். மேலும் இது மேலும் இது இதிகாச புகைப்படம் என்றாலும் எதிர்மறையான ஆற்றலை இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்க்கும். எனவே இது போன்ற போட்டோக்களையோ சிலைகளையோ உங்கள் வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.

💐வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் நேரம் மிகவும் இன்றியமையாதது. அப்படிப்பட்ட நேரத்தை நமக்கு எடுத்துக்காட்டும் கடிகாரம் ஓடாமல் இருந்தாலோ அல்லது பழுதுபட்டு உடைந்திருந்தாலோ அதை உடனடியாக அப்புறப்படுத்தி விடுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டின் வளர்ச்சியை இது தடை செய்யும்.

💐முகம் பார்க்க வைத்திருக்கும் கண்ணாடி உடைந்திருக்கிறதா அதை யூஸ் பண்ண வேண்டாம். அந்த கண்ணாடியை அப்படியே எடுத்து தூர போட்டு விடுங்கள் இல்லை. என்றால் இது உங்களுக்கு ஏழு விதமான துரதிஷ்டங்களை கொடுக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

💐படுக்கை அரை பக்கத்தில் அல்லது படுக்கை அறையில் நீங்கள் நீர்வீழ்ச்சி, மழை, கடல் போன்ற போட்டோக்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வைத்திருந்தால் அது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி தரும் என்பதால் அந்த போட்டோக்களை நீங்கள் வைக்கக்கூடாது.

💐இது மாதிரியான போட்டோக்களை நீங்கள் வடக்கு திசையில் வைக்கலாம். அதுபோல விலங்குகளின் போட்டோக்களையும் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் அது எதிர்மறையான ஆற்றல்களை வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் எனவே நீங்கள் அது போன்ற புகைப்படங்களை வைத்து வீட்டை அலங்காரம் செய்ய வேண்டாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …