பாலகிருஷ்ணாவுக்கும் மகனுக்கும் வந்த சண்டை.. அந்த இளம் நடிகைக்காக குடும்பத்தில் விரிசல்..

சினிமா ரசிகர்களை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ரசனை என்பது மாறுபடும். தமிழ் சினிமாவில் சுத்தமாக வரவேற்பே பெறாத ஒரு திரைப்படம் தெலுங்கு சினிமாவில் பெரிய வெற்றியை கொடுக்கும்.

அதேபோல ஹிந்தி சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படம் தமிழுக்கு ரீமேக் ஆகி வரும் பொழுது தோல்வி அடைந்துவிடும். இந்த மாதிரி மாநிலத்திற்கு மாநிலம் ரசிகர்களின் விருப்பம் என்பது வேறுபடும்.

மகனோடு வந்த சண்டை

அந்த வகையில் தெலுங்கு சினிமா தமிழிலிருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு வகை சினிமா என்று கூறலாம். படத்தில் அதிகமான சண்டை காட்சிகளும் நடிகைகளுக்கு கவர்ச்சியான பாடல் காட்சிகளும் வைத்துவிட்டாலே போதும் அந்த படம் வெற்றி அடைந்து விடும் என்பதுதான் தெலுங்கு சினிமாவில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

அதனால்தான் தமிழில் வந்து நடிக்க தெரியாத சில நடிகைகள் கூட தெலுங்கு சினிமாவிற்கு சென்று கவர்ச்சியை காட்டி அதன் மூலம் பிரபலம் அடைந்து விடுகின்றனர். நடிப்பது குறித்து நிறைய விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட தெலுங்கு சினிமா மக்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா.

பாலகிருஷ்ணா ஆசை:

இவரது படங்களை பொறுத்தவரை மாயாஜாலமாக சில விஷயங்களை அவர் படங்களை செய்வதை பார்க்க முடியும் .அவர் கையை காட்டினால் முன்னே வரும் ரயில் கூட பின்னே செல்வதை படங்களில் பார்க்க முடியும். அந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிரிப்பை தூண்டும் வகையில் இருந்தாலும் கூட தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மயிர் கூச்செறியும் காட்சிகளாகவே அவை இருந்து வருகின்றன.

இந்த நிலையில் பாலகிருஷ்ணா தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்பொழுதும் கூட பாலகிருஷ்ணா படங்களில் அவருக்கு இரண்டு கதாநாயகிகள் இருப்பதை பார்க்க முடியும். அதேபோல பெண்கள் விஷயத்தில் நிறைய சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக பாலகிருஷ்ணா இருந்து வருகிறார்.

குடும்பத்தில் விரிசல்

இந்த நிலையில் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா உடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது பாலகிருஷ்ணாவின் ஆசையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் ஸ்ரீ லீலாவிடமே ஒரு முறை கேட்டும் இருக்கிறார். ஆனால் ஸ்ரீ லீலா அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து அவர் தனது வீட்டிற்கு சென்று தனது வீட்டிலும் இதே விஷயத்தை கூறியிருக்கிறார். இதனால் கோபமான பாலகிருஷ்ணாவின் மகனான மோக்‌ஷகனா தேஜா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இப்பொழுது சில நாட்களுக்கு மோக்‌ஷகனா தேஜா தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக போகிறார் என்கிற செய்தி வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலாதான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால்தான் அவரது தந்தை அதில் அவரை கதாநாயகியாக போட்டு நடிக்க வேண்டும் என்று கூறிய பொழுது கோபப்பட்டு இருக்கிறார்  மோக்‌ஷகனா தேஜா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …