ஸ்ரீதேவியை அடைய துடித்த இயக்குனர்.. காப்பாற்ற போராடிய லீலை நடிகர்.. பலரும் அறியாத ரகசியம்..!

இந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

இவர் 1969இல் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடம் ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

நடிகை ஸ்ரீதேவி:

முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த குழந்தையாக பார்க்கப்பட்டார். இன்று வரை அந்த முருகன் வேடம் பலருக்கும் நினைவிருக்கும்.

இவர் முதன் முதலில் ஹீரோயின் ஆக நடித்தது 1976 இல் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படம் தான் .

அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி நடிக்க கமல்ஹாசன் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து நடித்திருந்தார்கள் .

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இப்படி பல மொழி திரைப்படங்களில் இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.

மேலும் சிறந்த நடிகைக்கான பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.

1969 இல் அவரது தலைப்பயணம் ஆரம்பித்து 1990 மற்றும் 80க்களில் பிரபலமான நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

குரு,ஜானி,மூன்றாம் பிறை, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, வாழ்வே மாயம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டாம் தாராமாக சென்ற ஸ்ரீதேவி:

இதனிடையே நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்து அங்கேயே செட்டில் ஆகி வந்த சமயத்தில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கூட அவரின் பணத்திற்காகவும் புகழுக்காகவும் திருமணம் செய்துக்கொண்டதாக ஸ்ரீதேவி மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால், ஸ்ரீதேவியோ போனி கபூரின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை பார்த்து மயங்கி அவரை காதலிக்க துவங்கியதாக பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

போனி கபூர் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தில் ஸ்ரீதேவியை ஒரு மனுசியாகவே மதிக்க மாட்டார்களாம்.

ஸ்ரீதேவிக்கு ஜான்விகபூர், குஷி கபூர் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறப்புக்கு பிறக்கும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீதேவி.

இதனிடையே அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் தனது உறவுக்கார ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் .

ஆனால் இவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது அவருக்கு பாம்பின் விஷத்தை கொடுத்து உயிரைக் கொன்று விட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனரான பாலு மகேந்திரா பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என கூறுகிறார்கள்.

ஸ்ரீதேவிக்கு பாலியல் தொல்லை:

அவரது அவரது இயக்கத்தில் நடிக்கும் நடிகைகளிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதோடு. நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தாராம் இயக்குனர் பாலு மகேந்திரா.

அப்படித்தான் ஸ்ரீதேவி மற்றும் கமல்ஹாசன் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் நடித்த போது பாலு மகேந்திரா ஸ்ரீதேவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தாராம்.

பாலு மகேந்திராவிடம் ஸ்ரீதேவியை காப்பாற்றுவதற்கு கமலுக்கு போதும் போதும் என ஆகிவிட்டதாம். கமல்ஹாசன் இல்லை என்றால் ஸ்ரீதேவி பாலுமகேந்திராவால் என்ன ஆகிறிருப்பார் என்று தெரியாதாம்.

அந்த அளவுக்கு அவரை வற்புறுத்தி பலமுறை பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்ததாக கூறுகிறார்கள். இதனாலே பாலு மகேந்திராவின் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என ஆரம்பத்திலேயே ஸ்ரீதேவி கூறினாராம்.

ஆனால் கமல்ஹாசன் பாதுகாப்பில் தான் அவர் தொடர்ந்து நடித்து வந்ததாக செய்திகள் கூறுகிறது. ஸ்ரீதேவிக்கு மட்டும் இல்லை சில்க் ஸ்மிதா, சுகாசினி, சோபா ,மோனிகா , ரோஷினி , ரேவதி உள்ளிட்ட பல பெண்கள் பாலு மகேந்திராவிடம் சிக்கி பாலியல் ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொண்டு படாத பாடுபட்டு இருக்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் சமீபத்திய பேட்டி கூறி இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …