சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்று நிறைய பெண்கள் என்று விருப்பத்தோடு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு அதிக பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.அப்படி இருக்கக்கூடிய பெண்களின் வறண்ட சருமத்தை கூட மினுமினுப்பாக மாற்றி தரக்கூடிய இயற்கையான எளிமையான வாழைப்பழ பேஸ் பேக் பழத்தைக் கொண்டு நீங்கள் பேஸ் பேக் செய்து போடுவதின் மூலம் மிக எளிதில் உங்கள் சருமம் மினுமினுக்கக்கூடிய அளவு மாறும்.
அப்படிப்பட்ட வாழைப்பழ ஃபேஸ் பேக்கை தயார் செய்து உங்கள் முகத்தில் எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழ ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்
1.கனிந்த வாழைப்பழம் இரண்டு
2.தேன் ஒரு ஸ்பூன்
3.தயிர் ஒரு ஸ்பூன்
4.மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை
முதலில் எந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். அதன் பின்னர் இதை தேன் மற்றும் தயிரை கலந்து ஒன்றாக நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து இந்த கலவையோடு எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூளையும் போட்டு நன்கு கலக்கவும்.
இதை கலந்து முடித்தவுடன் நீங்கள் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி நன்கு துடைத்து விட்டு இந்த கலவையை உங்கள் முகத்தில் அப்படியே பூசி விடுங்கள்.
10 நிமிடம் இந்த பூச்சு அப்படியே இருக்கட்டும் பத்து நிமிடம் கழிந்த பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள் இப்போது வறண்ட உங்களது சருமத்தில் மாற்றங்கள் தெரிவதை நீங்கள் கண்கூட காணலாம்.
குளிர்ந்த நீரில் கழுவிய பின் உங்களிடம் இருக்கும் ரோஸ் வாட்டர் சிறிதளவு பஞ்சில் நனைத்து அதை அப்படியே உங்கள் முகத்தில் லேசாக ஈரப்பதமோடு இருக்கும்படி தடவி விடவும்.
இதுபோன்று வாரத்தில் இருமுறை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கட்டாயம் உங்கள் முகம் பள பள என மாறுவதோடு வறண்ட சருமமும் மாறி நீங்க பார்ப்பதற்கு அழகியாக ஜொலிப்பீர்கள்.