மனோபாலா-வின் இறப்புக்கு இது தான் உண்மையான காரணம்..! – அதிர்ச்சியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!

நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்களின் இறப்பு குறித்து பயில்வான் ரங்கநாதன் ( Bayilvan Ranganathan ) வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு பார்த்தாலே சினிமா உலகப் பிரபலங்கள் அடுத்தடுத்து இறப்பு செய்திகள் திரையுலகை நிகழ்ந்து உள்ளது என்று கூறலாம். மயில்சாமியை அடுத்து தற்போது இயக்குனராக இருந்த மனோபாலா (Manobala) இறப்பு திரை உலகை புரட்டிப் போட்டுள்ளது.

பன்முக திறமையை கொண்டிருக்கும் இயக்குனரான மனோபாலா மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் நகைச்சுவையை அதிகளவு அள்ளித்தரும் நடிகர்களின் ஒருவர் என்று கூறலாம். சுமார் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்க இருக்கிறார்.

ManoBala

மேலும் மனோ பாலாவின் இறப்பு செய்தியை கேட்டு திரை உலகமே இவருக்கு அஞ்சலியை செலுத்திய நிலையில் தளபதி விஜய் நேரில் வந்து மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலியை செலுத்தினார்.

மனோபாலா தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தான் இவரது கடைசி படமாக மாறிவிட்டது.

இதற்கிடையில் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தாறுமாறாக youtube சேனலில் போட்டு வெளுத்து வாங்கும் பிரபல பயில்வான் ரங்கநாதன் மனோபாலாவின் மரணம் குறித்து பேசிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

திரை உலகப் பொருத்தவரை இயக்குனர் மனோபாலாவின் பங்கு மிகவும் பெரியது என்று கூறலாம். ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த பலரும் மனோபாலாவிடம் திரைப்படம் எடுக்க கேட்டதாக கூறப்படுகிறது. அதற்குள் இவரது மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Bayilvan Ranganathan

மனோபாலாவின் இறப்பை பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறும்போது நீண்ட நாட்களாக அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தான் இவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் இறப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி மிக செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.

ManoBala

இதனை அடுத்து மனோ பாலாவின் மகன் தனது தந்தை சில நாட்களாகவே உடல்நிலை குறைபாடு உடன் இருந்ததாகவும், மேலும் சமீபத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக பிசியோதெரபி கொடுக்கப்பட்டிருந்த சமயத்தில் தான் எதிர்பாராத விதமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிஅவரது செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது எப்படியோ திரை உலகிற்கு ஒரு மாபெரும் இழப்பு நிச்சயமாக உண்டு என்பது உண்மை. மனோபாலா போன்ற நடிகர்களின் இழப்பை திரை உலகத்தினால் ஈடுகட்ட முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய தமிழகம் சார்பில் நாம் பிரார்த்தனை செய்வோம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …